பதிவு செய்த நாள்
06
அக்
2019
03:10
திருவள்ளூர்:திருவள்ளூர், யோகஞான தட்சிணாமூர்த்தி பீடத்தில், வரும், 29ம் தேதி, குரு பெயர்ச்சி பரிகார மகா யாகம் நடைபெற உள்ளது.
நவக்கிரகங்களில் ஒருவரான, குரு பகவான், விருச்சிக ராசியில் இருந்து, தனுசு ராசிக்கு, வரும், 29ம் தேதி, செவ்வாய்கிழமை அதிகாலை, 3:42 மணிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதையொட்டி, திருவள்ளூர், பூங்கா நகர், யோகஞான தட்சிணாமூர்த்தி, ஞானமங்கள சனீஸ்வர பகவான் சன்னிதியில், அன்றைய தினம், பரிகார மகா யாகம், 108 ஹோம திரவியங்களைக் கொண்டு நடைபெறுகிறது.அதைத் தொடர்ந்து, 108 லிட்டர் பாலாபிஷேகம், விசஷே அலங்கார தீபாராதனை நடைபெறும். இது குறித்து, தட்சிணாமூர்த்தி பீட ஸ்தாபகர் என்.வெங்கட்ராம சிவாச்சாரியர் கூறியதாவது:குரு பெயர்ச்சியை முன்னிட்டு, தனுசு, மகரம், மீனம், ரிஷபம், கடகம், கன்னி மற்றும் துலாம் ஆகிய ராசிகளுக்கு, பரிகார யாகம் நடைபெறும்.பரிகாரம் செய்ய விரும்புவோர், தட்சிணாமூர்த்தி பீடத்தில், 500 ரூபாய் செலுத்தி, முன்பதிவு செய்ய வேண்டும். பரிகாரம் செய்வோருக்கு, யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட கலசம், பிரசாதமாக வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.