பதிவு செய்த நாள்
07
அக்
2019
01:10
திருத்தணி :திருத்தணி முருகன் கோவிலில், பக்தர்கள் உண்டியலில், 13 நாட்களில், 79.82 லட்சம் ரூபாய் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். திருத்தணி முருகன் கோவிலில், தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், மலைக்கோவிலுக்கு வந்து மூலவரை தரிசித்தனர்.பின், பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை, ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களாக, உண்டியலில் காணிக்கையாக செலுத்தினர்.நேற்று, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் பழனிகுமார் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, ஊழியர்களால் காணிக்கை எண்ணப்பட்டது.இதில், 79 லட்சத்து, 82 ஆயிரத்து, 756 ரூபாய் ரொக்கம், 528 கிராம் தங்கம், 3,643 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.