பதிவு செய்த நாள்
07
அக்
2019
01:10
கிருஷ்ணகிரி: நவராத்திரியை முன்னிட்டு பிராமணர் நலச்சங்கம் சார்பில், கிருஷ்ணகிரி புதுப்பேட்டை சங்கரமட்டத்தில், நேற்று காலை கன்யா பூஜை நடந்தது. இதில், ஐந்து முதல் பத்து வயதுக்கு உட்பட்ட, 21 குழந்தைகளை அம்மனாக பாவித்து, பூஜைகள் செய்து பாவாடை, சட்டை மற்றும் மங்கல பொருட்களுடன் தாம்பூலம் வழங்கி அவர்களை, நமஸ்கரித்து ஆசிகள் பெற்றனர். தொடர்ந்து, நவராத்திரி கொலுப்போட்டிகள் நடந்தன. இதில், பாரம்பரியமிக்க கலாசாரத்தை பிரதிபலிக்கும், சிறந்த கற்பனை திறனோடும், கலை நயத்தோடும் வைக்கப்பட்டிருந்த கொலு தேர்ந்தெடுக்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்து வரும் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தின் போது பரிசுகள் வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சியில், பிராமண நலச்சங்க நிர்வாகிகள், பெண்கள் மற்றும் திரளான மக்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை மகளிர் அணியினர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.