பதிவு செய்த நாள்
08
அக்
2019
11:10
குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும், அவர்களுக்கான கல்வி பயிற்சி அளிப்பதற்கும் உகந்த நாள், விஜயதசமி. அந்த நன்னாளான இன்று, இளம் தளிர்களுக்கு, எழுத்தறிவை துவக்கி வைக்கும், ‘அரிச்சுவடி ஆரம்பம்’ என்ற , நிகழ்ச்சி, ‘தினமலர்’ நாளிதழ் சார்பில் நடத்தப்பட்டது.
தாம்பரம்- வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் குழந்தைகளின் நாவில் அகரம் எழுதி அதே குழந்தையின் கையால் நெல்மணிகள் மீதும் குழந்தைகளுக்கு அகரம் எழுதும் வித்தியாரம்பம் செய்யப்பட்டது. இதில் காவேரி மருத்துவமனையின் குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவர் டாக்டர் கற்பகம்பாள், வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன், ஜோதிடர் காழியூர் நாராயணன், சங்கரா கல்வி அறக்கட்டளை அறங்காவலர் கிரி சீதாராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் குழந்தைகளுக்கு நாக்கில் வித்யாரம்பம் எழுதினர். புதுச்சேரி முத்தியால்பேட்டை லஷ்மி ஹயக்ரீவர் கோவிலில், பள்ளியில் சேர்க்க உள்ள குழந்தைகளுக்கு நெல் மணிகளில் எழுதி படிப்பை துவங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. விஜயதசமியை முன்னிட்டு உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.