பதிவு செய்த நாள்
08
அக்
2019
11:10
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுக்கா பாதூர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
அன்று காலை 7.30 மணிக்கு த்வஜாரோஹணம் திருப்பல்லக்கும், பகல் 12 மணிக்கு விசேஷ திருமஞ்சனம், ததியாராதனம், இரவு சந்திரபிரபையிலும், சுவாமி வீதியுலா நடந்தது. 1 ம் தேதி காலை திருபல்லக்கு திருமஞ்சனம், இரவு ஹனுமந்த வாகனத்திலும், 2ம் தேதி காலை திருபல்லக்கு விசேஷ திருமஞ்சனம், இரவு சேஷ வாகனத்திலும் சுவாமி வீதியுலா நடந்தது. 3ம் தேதி காலை திருப்பல்லக்கில் பெருமாள், நாச்சியார் திருக்கோலத்திலும், பகல் 11 மணிக்கு விசேஷ திருமஞ்சனம், ததியாராதனம் நடந்தது. இரவு 10 மணிக்கு சுவாமி தங்க கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். 4ம் தேதி மாலை 5 மணிக்கு திருக்கல்யாணம், இரவு 10 மணிக்கு புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு திருமஞ்சனமும், ரதோற்சவம் நடந்தது. ரதோற்சவத்தில் சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் பக்தி உலாத்துதல், திருமஞ்சனம் நடந்தது. இன்று இரவு விடையாற்றி உற்சவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா விஜயராகவ அய்யங்கார் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர்.