நாகம்பட்டியில் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08அக் 2019 12:10
வேடசந்தூர்: நாகம்பட்டி மகாலட்சுமி கோவிலில், பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வேடசந்தூர் அருகே நாகம்பட்டியில், மகாலட்சுமி திருக்கோயில் உள்ளது. ஆயுத பூஜை மற்றும் நவராத்திரி விழாவை முன்னிட்டு தற்போது கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று காலை 10 மணியளவில் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. சுற்றுப்பகுதியைச் சேர்ந்த திரளான மக்கள் பங்கேற்றனர்.