பதிவு செய்த நாள்
08
அக்
2019
12:10
தேனி: தேனியில் சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜையை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு அலங்காரம், ஆராதனை நடந்தது.பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பெரியகுளம் ரோடு பெத்தாட்சி விநாயகர் கோயிலில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. பங்களாமேடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவர், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார, ஆராதனை நடந்தது. அல்லிநகரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பள்ளி எழுச்சி, சிறப்பு அலங்காரம், ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.பெரியகுளம் ரோடு வேல்முருகன் கோயிலில் சிறப்பு ஆராதனை அலங்காரம் நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆயுதபூஜை கொண்டாட்டம்: பங்களாமேடு நேதாஜி ஆட்டோ நிலையத்தின் மாலை சரஸ்வதிக்கு படையல் வைத்து, அன்னதானம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று உணவருந்தினர். பங்களாமேடு டாக்டர் ஏ.பி.ஜே., அப்துல்கலாம் சுற்றுலா வேன் ஓட்டுநர் நலச்சங்கம் சார்பில் ஆயுதபூஜை ஸ்டாண்டில் நடந்தது. தலைவர் அய்யப்பன், செயலாளர் சஞ்சய்காந்தி, பொருளாளர் ராஜேந்திரன் பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பாரஸ்ட் ரோடு நண்பர்கள் ஆட்டோ நிலையம், நேதாஜி ஆட்டோ நிலையம், நேதாஜி நண்பர்கள் ஆட்டோ நிலையங்களில் சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை நடந்தது. நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். பெரியகுளம் ரோடு ஆட்டோ நிலையம், பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள ஆட்டோ நிலையம், தனியார் மினி பஸ் உரிமையாளர்கள் சங்கம், மாவட்ட கனரக லாரி ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், நேற்று மாலை பூஜை நடந்தது.பெரியகுளம்: பாலசுப்பிரமணியர் கோயிலில் சரஸ்வதி பூஜை நடந்தது. பாலசுப்பிரமணியர், ராஜேந்திர சோழீஸ்வரர், அறம்வளர்த்தநாயகி, சரஸ்வதி, லட்சுமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
பெரியகுளம் கம்பம்ரோடு காளியம்மன் கோயிலில் சரஸ்வதி பூஜை நடந்தது. மூலவர் காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். கொலுவில், சரஸ்வதி, மகாலட்சுமி பஜனை பாடப்பட்டது. நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் குழந்தைகள் கல்வி நலன்வேண்டி கிருஷ்ணர், ராதைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பேனா மற்றும் குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நாமத்வார் பொறுப்பாளர்கள் கிருஷ்ணசைதன்யதாஸ் செய்திருந்தார்.