நோயாளிகளைச் சந்தித்தால், ”இறைவா! வேதனை தரும் நோயை நீக்கி குணப்படுத்துவாயாக. நீ இல்லாவிட்டால் நோய் குணமாகாது. நோய் என்பது இறைவன் அளிக்கும் சோதனை. அதைக் கொண்டு அடியார்களை பரிசுத்தமாக்குகிறான்”. நோயாளியைச் சந்தித்து ஒருவர் ஆறுதல் கூறினால் அப்போது வானத்தில் இருந்து அழைப்பாளர் ஒருவர் குரல் கொடுப்பார். எப்படி தெரியுமா? ”நல்லவரான நீர் உமது நற்குணத்தால் சுவர்க்கத்தில் வீடு சம்பாதித்துக் கொண்டீர்”