பொருள்: அர்ஜுனா! சத்வ, ரஜோ, தமோ என்னும் மூன்று குணங்கள் இயற்கையில் இருந்து தோன்றியவை. அவையே அழிவு இல்லாத ஜீவாத்மாவை உடலில் கட்டுகிறது. இதில் சத்வ குணம் தூய்மையானது. ஒளி மிக்கது. மாற்றம் இல்லாதது. இதுவே ஞான வழியில் செல்ல மனிதனை தூண்டுகிறது. விருப்பத்தின் வடிவமான ரஜோ குணம் ஆசை, பற்றில் இருந்து உண்டாகிறது. செயலிலும், அதனால் கிடைக்கும் பலனிலும் ஒருவனை இதுவே ஈடுபடுத்துகிறது.