* செந்தில்நகர் வாழும் சேவகனே! சூரனுக்கு பெருவாழ்வு தந்தவனே! குன்று தோறும் குடிகொண்ட முருகனே! சிவனின் நெற்றிக் கண்ணில் அவதரித்த சிவபாலனே! வடிவேலனே! கார்த்திகைப் பெண்களின் அரவணைப்பில் வளர்ந்த கார்த்திகேயனே! அகத்தியருக்கு உபதேசித்த குருநாதனே! உன் திருவடியைத் தஞ்சம் என வந்து விட்டோம்.
* ஆறுபடை வீட்டில் அமர்ந்திருக்கும் அண்ணலே! திருத்தணியில் வாழும் தணிகாசலனே! பழநி தண்டாயுதபாணியே! தமிழில் வைதாரையும் வாழ வைக்கும் கருணைக் கடலே! சிக்கல் சிங்கார வேலவனே! மயில்வாகனனே! சேவல்கொடி ஏந்தியவனே! உன் சன்னதியில் அடைக்கலம் புகுந்து விட்டோம். நீயே அருள்புரிய வேண்டும்.
* சூரனை அழித்து தேவர்களைக் காத்தவனே! தேவசேனாபதியே! தெய்வானை மணவாளனே! அருணகிரிநாதருக்கு அருள்புரிந்தவனே! ஆறுமுகனே! பன்னிரு கைகளால் வாரி வழங்கும் வள்ளல் பெருமானே! திருமாலின் மருமகனே! ஆனைமுகனின் தம்பியே! குழந்தை தெய்வமே! எங்களுக்கு வாழ்வில் ஆரோக்கியம், செல்வ வளத்தையும் தந்தருள்வாயாக.
* பார்வதி பெற்ற பாலகனே! கந்தனே! கடம்பனே! கதிர்வேலவனே! சிவசுப்பிரமணியனே! செந்துார் முருகனே! குறிஞ்சி ஆண்டவனே! அவ்வைக்கு கனி கொடுத்தவனே! மயிலேறிய மாணிக்கமே! முத்துக்குமரனே! சுவாமிநாதனே! சரவண பவனே! சண்முகனே! தாயினும் சிறந்த தயாபரனே! வாழ்வில் குறுக்கிடும் துன்பங்களைப் போக்கி வெற்றி தருவாயாக.
* வேதம் போற்றும் வித்தகனே! குகனே! வள்ளி மணவாளனே! பக்தர்கள் உள்ளத்தில் வாழ்பவனே! காங்கேயனே! கண்கண்ட தெய்வமே! கலியுக வரதனே! திருப்புகழ் நாயகனே! தமிழ்க் கடவுளே! வாழ்வில் எல்லா வளமும் பெற்று, இன்பமுடன் வாழ வரம் தருவாயாக.