Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி ... அன்னுார் முருகன் கோவில்களில் கந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூரில் நவ., 2ல் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2019
03:10

திருப்பூர்:திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழா, அபி ஷேகம் மற்றும் காப்பு அணியும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.ஐப்பசி மாத  அமாவாசைக்கு அடுத்தநாள், கந்தசஷ்டி விரதம் துவங்குகிறது; சஷ்டி அன்று,  சூரசம்ஹார விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

திருப்பூர் சுற்றுப்பகுதியில் உள்ள முருகன் கோவில்களில், சூரசம்ஹார விழா, நேற்று 28ம் தேதி காப்பு கட்டும் நிகழ்வுகளுடன் துவங்கியது.

திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு, நேற்று காலை அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. மாலையில், கந்தசஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள், காப்புக்கட்டிக்கொண்டனர்.

தொடர்ந்து, தினமும் காலை, 10:30 மணிக்கு, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு, 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற உள்ளது.

வரும், நவ., 2ம் தேதி காலை அபிஷேகமும், மாலையில் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடக்கிறது. சூரனை வதம் செய்து திரும்பும் ஜெயந்திநாதர் என்று பாடப்படும் முருகப்பெருமானுக்கு, இரவு, 8:00 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.

* திருப்பூர் வாலிபாளையம் கல்யாணசுப்ரமணியர் கோவிலில், வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நேற்று 28ல் நடந்தது. தொடர்ந்து, சஷ்டி விரத இருக்கும் பக்தர்கள், காப்புக்கட்டி, விரதத்தை துவக்கினர்.

* திருப்பூர், காலேஜ் ரோடு, கொங்கணகிரி கந்தபெருமான் கோவிலில், நேற்று 28 ல், காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரபூஜை நடந்தது. அதனை  தொடர்ந்து, அலங்கார பூஜை யும், சஷ்டி விரதம் துவக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

* மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி கோவிலில், நேற்று காலை, குழந்தை  வேலாயு தசுவாமிக்கு மகா அபிஷேகமும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தன.  தொடர்ந்து, அர்ச்சகர்கள் கையால் காப்பு அணிந்து, பக்தர்கள் சஷ்டி விரதம்  துவங்கினர். விரதம் துவக்கிய பக்தர்களுக்கு, அபிஷேக பால், பிரசாதமாக  வழங்கப்பட்டது.

* பல்லடத்தை அடுத்த மாதப்பூர் முத்துக்குமார சுவாமி கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹார விழா கொண்டாடப்பட உள்ளது, அதை முன்னிட்டு, காப்பு கட்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி கந்த சஷ்டி விரதத்தை துவக்கினர்.

* அவிநாசியிலுள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருக நாதசுவாமி கோவில், சேவூர் வாலீஸ்வரர் கோவில் உட்பட கோவில்களில், கந்த சஷ்டி விழா துவங்கியது. முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவக்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மார்கழி பிரதோஷம் சிவ வழிபாட்டிற்கு உகந்த சிறந்த நாள். 2026ம் ஆண்டின் தொடக்கத்திலேயே பிரதோஷம் வருவது ... மேலும்
 
temple news
சென்னை: 2025 ம் ஆண்டு இனிதே நிறைவடைந்து 2026 ம் ஆண்டு பிறந்ததையொட்டி, மக்கள் உலகம் முழுவதும் புதிய ஆண்டை ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜருக்கு, வெளிநாட்டு பக்தர், ரூ. 25லட்சம் மதிப்புள்ள நவரத்தின ஆபரணம் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை தின இரண்டாம் ஆண்டு விழா மற்றும் துவாதசி உற்சவத்தை ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவாதசியையொட்டி இன்று காலை திருமலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar