கேதார்நாத் : உத்திரகாண்ட் மாநிலத்தில் கேதார்நாத் கோயில் கடும் பனிப்பொழிவு காரணமாக மூடப்பட்டுள்ளது.
உத்திரகாண்ட் மாநிலத்தில் கேதார்நாத் கோயிலை சுற்றி உள்ள மலைப்பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதன் காரணமாக, குளிர்கால பூஜைக்காக திறக்கப்பட்ட கேதார்நாத் கோயில் மூடப்பட்டுள்ளது. கேதார்நாத் கோயில் மூடப்பட்டதை தொடர்ந்து, .உற்சவரை உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள, ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உக்கிமாத் நகரத்தில் தரிசிக்கலாம். மீண்டும் ஏப்ரல் 2020ல் கோயில் திறக்கப்படும்.