Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சமயபுரம் கோவில் தேரோட்டம் நாளை ... குலசை முத்தாரம்மன் கோயிலில் சமய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
800 ஆண்டுகளாக தொடரும் மதநல்லிணக்கம் ஏற்படுத்திய விழாக்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2012
10:04

மேலூர்:மேலூர் அருகே தும்பைப்பட்டி, வெள்ளலூரில் சித்திரை முதல் நாளை முன்னிட்டு நேற்று நடந்த விழாக்களில் அனைவரும் சமம் என்பதை காட்ட அனைத்து சமுதாயத்தினருக்கும் வெற்றிலை, பாக்கு கொடுத்து "முதல் மரியாதை செய்யப்பட்டது. மதநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விழாக்கள் நடந்தன. தும்பைப்பட்டி ஊராட்சியில் சித்திரை முதல் நாளில், தெற்குவளவு மந்தையில் கிராம அம்பலகாரர்கள் தலைமையில் அனைத்து ஜாதி, இன மக்கள் கூடுவர். அனைவரும் சந்தனம், குங்குமம் கொடுத்து வரவேற்கப்படுவர். பின் ஊர் கணக்கப்பிள்ளை, ஒவ்வொரு பிரிவினர் மற்றும் சுற்றியுள்ள மேலூர், கீழையூர், பூதமங்கலம் ஊர் மக்களை அழைப்பார். தும்பைப்பட்டி பள்ளிவாசல் நோட்டம் பொறுப்பில் உள்ள முஸ்லிம் பிரமுகர், வெற்றிலை, பாக்குகளை அனைவருக்கும் வழங்குவார். ஆண்டு முழுவதும் அனைத்து சமுதாயத்தினரும் ஒற்றுமையுடன், சிறப்புடனும் செயல்பட வேண்டும் என்பதற்காக இவ்விழா நடத்தப்படுகிறது. நேற்று நடந்த விழாவில் அனைத்து தரப்பினருக்கும் இம்மரியாதை செய்யப்பட்டது.

800 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம் என கிராமத்தினர்: தெரிவித்தனர். வெற்றிலை பிரி திருவிழா:மேலூர் அருகே உள்ள வெள்ளலூர், 54 கிராமங்களுக்கு தலைமையிடமாக கருதப்படுகிறது. சித்திரை பிறப்பை முன்னிட்டு, இங்குள்ள மந்தையில் மக்கள் முன்னிலையில் நேற்று ஒரு டன் வெற்றிலை கொண்டு வந்து குவிக்கப்பட்டது. ஒவ்வொரு கிராம அம்பலகாரர்களுக்கும் தனித் தனியாக வெற்றிலை கட்டுகள் வழங்கப்பட்டன. அவற்றை தனித் தனியாக பிரித்து, திருமணமான ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டன. இவ் வெற்றிலை அனைத்து சமுதாய மக்களுக்கும் பிரித்து கொடுக்கப்படும். மக்கள், வழங்கப்பட்ட வெற்றிலையை வீட்டில் வைத்து படையல் செய்தனர். பின் வயலுக்கு சென்று சாமி கும்பிட்டு, விவசாய பணிகளை துவக்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar