Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அந்தாதி படித்தால் சிவனருள் ... வளர்ச்சி தரும் வராகப்பெருமாள் வளர்ச்சி தரும் வராகப்பெருமாள்
முதல் பக்கம் » துளிகள்
கண்நோய் தீர்க்கும் கருணை தெய்வம்
எழுத்தின் அளவு:
கண்நோய் தீர்க்கும் கருணை தெய்வம்

பதிவு செய்த நாள்

22 ஏப்
2020
05:04

மதுரை வண்டியூர் மாரியம்மன் கண்நோய் தீர்க்கும் கருணை தெய்வமாகத் திகழ்கிறாள். காவல் தெய்வமான துர்கையம்மன் கோயில் மதுரை நகரின் கிழக்கு எல்லையில் இருந்தது. மதுரையை ஆட்சி செய்த பாண்டிய மன்னர்கள் போருக்கு செல்லும் முன் இங்கு வழிபடுவர். வறட்சி ஏற்பட்ட காலத்தில் மழை வரம் வேண்டி வழிபட்டதால் காலப்போக்கில் மாரியம்மனாக கருதி வழிபடத் தொடங்கினர்.  


பார்வதியின் வெவ்வேறு வடிவங்களான மாரியம்மன், துர்கை இருவரும் கருவறையில் ஒரே சிலை வடிவில் மூலவராக உள்ளனர். சிரித்த முகத்துடன் இருக்கும் அம்மன் கைகளில் பாசம், அங்குசம் ஏந்தியிருக்கிறாள். இடது காலை தொங்கவிட்டும், வலதுகால் மடித்த நிலையிலும் உள்ளது.  காலுக்கு கீழே மகிஷாசுரன் இருக்கிறான்.  பக்தர்கள் தங்களின் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்தும் போது, பூக்கட்டி அம்மனிடம் உத்தரவு கேட்கின்றனர். மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் விழா நடக்கும் முன் முதல்பூஜை இங்கு நடத்தப்படுகிறது. இங்கு தரப்படும் தீர்த்தத்தை பருகினால் அம்மை குணமாகும். 


கண்நோய் தீர வெள்ளியால் ஆன கண்மலர் காணிக்கை செலுத்துகின்றனர். தோல் வியாதிக்கு அகல உப்பும், மிளகு செலுத்துகின்றனர். பேச்சியம்மன், அரசமரத்தின் அடியில் விநாயகர் சன்னதிகள் பிரகாரத்தில் உள்ளன. 


செல்வது எப்படி: மதுரை பெரியார் நிலையம் –  தெப்பக்குளம் செல்லும் சாலையில் 4 கி.மீ.,
விசேஷ நாட்கள்: ஆடி வெள்ளி, தைவெள்ளி, தைப்பூசம், பங்குனி பிரம்மோற்ஸவம்
நேரம்: காலை 6:00 – இரவு 9:00 மணி
தொடர்புக்கு 0452 – 231 1475
அருகிலுள்ள தலம்: மதுரை மீனாட்சியம்மன் கோயில்

 
மேலும் துளிகள் »
temple news
கருத் என்றால் சிறகு என்று பொருள். அழகிய சிறகுடைய பறவை என்பதால் கருடன் எனப்படுகிறது. பறவைகளுக்கு ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar