Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புகழ் பகுதி-1 திருப்புகழ் பகுதி-13 திருப்புகழ் பகுதி-13
முதல் பக்கம் » திருப்புகழ்
திருப்புகழ் பகுதி-7
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 மார்
2011
12:03

வள்ளிமலை

315. அல்லிவிழி யாலு முல்லைநகை யாலு
மல்லல்பட ஆசைக்  கடலீயும்
அள்ளவினி தாகி நள்ளிரவு போலு
முள்ளவினை யாரத்  தனமாரும்

இல்லுமிளை யோரு மெல்லஅய லாக
வல்லெருமை மாயச்  சமனாரும
எள்ளியென தாவி கொள்ளைகொளு நாளி
லுய்யவொரு நீபொற்  கழல்தாராய்

தொல்லைமறை தேடி யில்லையெனு நாதர்
சொல்லுமுப தேசக்  குருநாதா
துள்ளிவிளை யாடு புள்ளியுழை நாண
வெள்ளிவன மீதுற்  றுறைவோனே

வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ
வல்லைவடி வேலைத்  தொடுவோனே
வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
வள்ளிமண வாளப்  பெருமாளே.

316. ஐயுமுறு நோயு மையலும வாவி
னைவருமு பாயப் பலநூலின்
அள்ளல்கட வாது துள்ளியதில் மாயு
முள்ளமுயில் வாழ்வைக் கருதாசைப்;

பொய்யுமக லாத மெய்யைவள ராவி
உய்யும்வகை யோகத் தணுகாதே
புல்லறிவு பேசி யல்லல்படு வேனை
நல்ல இரு தாளிற் புணர்வாயே;

மெய்யபொழில் நீடு தையலைமு னாலு
செய்யபுய மீதுற் றணைவோனே
வெள்ளையிப மேறு வள்ளல்கிளை வாழ
வெள்ளமுது மாவைப் பொருதோனே;

வையமுழு தாளு மையமயில் வீர
வல்லமுரு காமூத் தமிழ்வேளே
வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
வள்ளி மணவாளப் பெருமாளே.

317. கையொத்து வாழு மிந்த மெய்யொத்த வாழ்வி கந்து
பொய்யொத்த வாழ்வு கண்டு  மயலாகிக்
கல்லுக்கு நேரும் வஞ்ச உள்ளத்தர் மேல்வி ழுந்து
கள்ளப்ப யோத ரங்க  ளுடன்மேவி

உய்யப்ப டாமல் நின்று கையர்க்கு பாய மொன்று
பொய்யர்க்கு மேய யர்ந்து  ளுடைநாயேன்
உள்ளப்பெ றாகநின்று தொய்யப்ப டாம லென்று
முள்ளத்தின் மாய்வ தொன்றை  மொழியாயோ

ஐயப்ப டாத ஐந்து பொய்யற்ற சோலை தங்கு
தெய்வத்தெய் வானை கொங்கை  புணர்வோனே
அல்லைப்பொ றாமு ழங்கு சொல்லுக்ர சேவ லொன்று
வெல்லப்ப தாகை கொண்ட  திறல்வேலா

வையத்தை யோடி யைந்து கையற்கு வீசு தந்தை
மெய்யொத்த நீதி கண்ட  பெரியோனே
வள்ளிக்கு ழாம டர்ந்த வள்ளிக்கல் மீது சென்று
வள்ளிக்கு வேடை கொண்ட  பெருமாளே.

318. முல்லைக்கு மார னங்கை வில்லுக்கு மாதர் தங்கள்
பல்லுக்கும் வாடி யின்ப  முயலாநீள்
முள்ளுற்ற கால் மடிந்து கொள்ளிக்குள் மூழ்கி வெந்து
பள்ளத்தில் வீழ்வ தன்றி  யொருஞான

எல்லைக்கு மார ணங்கள் சொல்லித்தொ ழாவ ணங்கு
மெல்லைக்கும் வாவி நின்ற  னருள்நாமம்
எள்ளற்கு மால யர்ந்து வுள்ளத்தி லாவ என்று
முள்ளப்பெ றாரி ணங்கை  யொழிவேனோ

அல்லைக்க வானை தந்த வல்லிக்கு மார்பி லங்க
அல்லிக்கொள் மார்ப லங்கல்  புனைவோனே
அள்ளற்ப டாத கங்கை வெள்ளத்து வாவி தங்கி
மெள்ளச்ச ரோரு கங்கள்  பயில்நாதா

வல்லைக்கு மார கந்த தில்லைப்பு ராரி மைந்த
மல்லுப்பொ ராறி ரண்டு  புயவீரா
வள்ளிக்கு ழாம டர்ந்த வள்ளிக்கல் மீது சென்று
வள்ளிக்கு வேடை கொண்ட  பெருமாளே.

319. கள்ளக்கு வாற்பை தொள்ளைப்பு லாற்பை
துள்ளிக்க னார்க்க  யவுகோப
கள்வைத்த தோற்பை பொள்ளுற்ற காற்பை
கொள்ளைத்து  ராற்பை  பசுபாச

அள்ளற்பை மாற்பை ஞெள்ளற்பை சீப்பை
வெள்ளிட்ட சாப்பி  சிதமீரல்
அள்ளச்சு வாக்கள் சள்ளிட்டி ழாப்பல்
கொள்ளப்ப டாக்கை  தவிர்வேனோ

தெள்ளத்தி சேர்ப்ப வெள்ளத்தி மாற்கும்
வெள்ளத்தி மாற்கு  மருகோனே
சிள்ளிட்ட காட்டி லுள்ளக்கி ரார்க்கொல்
புள்ளத்த மார்க்கம்  வருவோனே

வள்ளிச்சன் மார்க்கம் விள்ளைக்கு நோக்க
வல்லைக்கு ளேற்று  மிளையோனே
வள்ளிக்கு ழாத்து வள்ளிக்கல் காத்த
வள்ளிக்கு வாய்த்த  பெருமாளே.

320. வெல்லிக்கு வீக்கு முல்லைக்கை வீக்கு
வில்லிக்க தாக்க  ருதும்வேளால்
வில்லற் றவாக்கொள் சொல்லற்று காப்பொய்
யில்லத் துறாக்க  வலைமேவு

பல்லத்தி வாய்க்க அல்லற் படாக்கை
நல்லிற் பொறாச்ச  மயமாறின்
பல்லத்த மார்க்க வல்லர்க்கர் மூர்க்கர்
கல்விக் கலாத்த  லையலாமோ

அல்லைக்கொல் வார்த்தை சொல்லிக்கி தோத்து
சொல்குக்கு டார்த்த  இளையோனே
அல்லைக்கு மாற்றி னெல்லுக்கு மேற்புல்
கெல்லைப்ப டாக்க  ருணைவேளே

வல்லைக்கு மேற்றர் தில்லைக்கு மேற்றர்
வல்லிக்கு மேற்ற  ரருள்வோனே
வள்ளிக் குழாத்து வள்ளிக்கல் காத்த
வள்ளிக்கு வாய்த்த  பெருமாளே.

321. ககனமு மநிலமு மனல்புனல் நிலமமை
கள்ளப்புலாற்கி ருமிவீடு
கனலெழ மொழிதரு சினமென மதமிகு
கள்வைத்த தோற்பை சுமவாதே;

யுக இறுதிகளிலு மிறுதியி லொருபொருள்
உள்ளக்க ணோக்கு மறிவூறி
ஒளிதிகழ ருவுரு வெனுமறை யிறுதியி
லுள்ளத்தை நோக்க அருள்வாயே;

ம்ருகமத பரிமள விகசித நளினநள்
வெள்ளைப்பிராட்டி இறைகாணா
விடதர குடிலச டிலமிசை வெகுமுக
வெள்ளத்தை யேற்ற பதிவாழ்வே;

வகுளமு முகுளித வழைகளு மலிபுன
வள்ளிக் குலாத்தி கிரிவாழும்
வனசரர் மரபினில் வருமொரு மரகத
வள்ளிக்கு வாய்ந்த பெருமாளே.

322. அல்லசல டைந்த வில்லடல னங்கன்
அல்லிமல ரம்பு  தனையேவ
அள்ளியெரி சிந்த பிள்ளைமதி தென்ற
லையமுது கிண்ட  அணையூடே

சொல்லுமர விந்த வல்லிதனி நின்று
தொல்லைவினை யென்று  முனியாதே
துய்யவரி வண்டு செய்யமது வுண்டு
துள்ளியக டம்பு  தரவேணும்

கல்லசல மங்கை யெல்லையில் விரிந்த
கல்விகரை  கண்ட  புலவோனே
கள்ளொழுகு கொன்றை வள்ளல்தொழ அன்று
கல்லலற வொன்றை  யருள்வோனே

வல்லசுர ரஞ்ச நல்லசுரர் விஞ்ச
வல்லமைதெ ரிந்த  மயில்வீரா
வள்ளிபடர் கின்ற வள்ளிமலை சென்று
வள்ளியை மணந்த  பெருமாளே.

323. குடிவாழ்க்கை யன்னை மனையாட்டி பிள்ளை
குயில்போற்ப்ர சன்ன  மொழியார்கள்
குலம்வாய்த்த நல்ல தனம்வாய்ந்த தென்ன
குருவார்த்தை தன்னை  யுணராதே

இடநாட்கள் வெய்ய நமனீட்டி தொய்ய
இடர்கூட்ட இன்னல்  கொடுபோகி
இடுகாட்டி லென்னை எரியூட்டு முன்னு
னிருதாட்கள் தம்மை  யுணர்வேனோ

வடநாட்டில் வெள்ளி மலைகாத்து புள்ளி
மயில்மேற்றி கழ்ந்த  குமரேசா
வடிவாட்டி வள்ளி அடிபோற்றி வள்ளி
மலைகாத்த நல்ல  மணவாளா

அடிநாட்கள் செய்த பிழைநீக்கி யென்னை
யருள்போற்றும் வண்மை  தரும்வாழ்வே
அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல
அடியார்க்கு நல்ல  பெருமாளே.

324. சிரமங்க மங்கைகண் செவிவஞ்ச நெஞ்சுசெஞ்
சலமென்பு திண்பொருந்  திடுமாயம்
சிலதுன்ப மின்பமொன் றிறவந்து பின்புசெந்
தழலின்கண் வெந்துசிந்  திடஆவி

விரைவின்க ணந்தகன் பொரவந்த தென்றுவெந்
துயர்கொண்ட லைந்துலைந்  தழியாமுன்
வினையொன்று மின்றிநன் றியலொன்றி நின்பதம்
வினவென்று அன்புதந்  தருள்வாயே

அரவின்கண் முன்துயின் றருள்கொண்ட லண்டர்கண்
டமரஞ்ச மண்டிவந்  திடுசூரன்
அகலம் பிளந்தணைந் தகிலம் பரந்திரங்
கிடஅன் றுடன்றுகொன்  றிடும்வேலா

மரைவெங் கயம்பொருந் திடவண் டினங்குவிந்
திசையொன்ற மந்திசந்  துடனாடும்
வரையின்கண் வந்துவண் குறமங்கை பங்கயம்
வரநின்று கும்பிடும்  பெருமாளே.

325. வரைவில்பொய் மங்கையர் தங்க ளஞ்சன
விழியையு கந்துமு கந்து கொண்டடி
வருடிநி தம்பம ளைந்து தெந்தென  அளிகாடை
மயில்குயி லன்றிலெ னும்பு ளின்பல
குரல்செய்தி ருந்துபி னுந்தி யென்கிற
மடுவில்வி ழுந்துகி டந்து செந்தழல்  மெழுகாகி

உருகியு கந்திதழ் தின்று மென்றுகை
யடியின கங்கள்வ ரைந்து குங்கும
உபய தனங்கள்த தும்ப அன்புட  னணையாமஞ்
சுலவிய கொண்டைகு லைந்த லைந்தெழ
அமளியில் மின்சொல்ம ருங்கி லங்கிட
உணர்வழி யின்பம றந்து நின்றனை  நினைவேனோ

விரவி நெருங்குகு ரங்கி னங்கொடு
மொகுமொகெ னுங்கட லுங்க டந்துறு
விசைகொடி லங்கைபு குந்த ருந்தவர்  களிகூர
வெயில்நில வும்பரு மிம்ப ரும்படி
ஜெயஜெய வென்றுவி டுங்கொ டுங்கணை
விறல்நிரு தன்தலை சிந்தி னன்திரு  மருகோனே

அருகர் கணங்கள்பி ணங்கி டும்படி
மதுரையில் வெண்பொடி யும்ப ரந்திட
அரகர சங்கர வென்று வென்றருள்  புகழ்வேலா
அறம்வளர் சுந்தரி மைந்த தண்டலை
வயல்கள் பொருந்திய சந்த வண்கரை
யரிவை விலங்கலில் வந்து கந்தருள்  பெருமாளே.

திருக்கழுக்குன்றம்

326. அகத்தி னைக்கொண் டிப்புவி மேல்சில
தினத்து மற்றொன் றுற்றறி யாதுபின்
அவத்துள் வைக்குஞ் சித்தச னாரடு  கணையாலே
அசுத்த மைக்கண் கொட்புறு பாவையர்
நகைத்து ரைக்கும் பொய்க்கடல் மூழ்கியெ
அலக்க ணிற்சென் றுத்தடு மாறியெ சிலநாள்போய்

இகத்தை மெய்க்கொண் டிப்புவி பாலர்பொன்
மயக்கி லுற்றம் பற்றைவி டாதுட
லிளைப்பி ரைப்பும் பித்தமு மாய்நரை  முதிர்வாயே
எமக்க யிற்றின் சிக்கினி லாமுனுன்
மலர்ப்ப தத்தின் பத்திவி டாமன
திருக்கு நற்றொண் டர்க்கிணை யாகவு  னருள்தாராய்

புகழ்ச்சி லைக்கந் தர்ப்பனு மேபொடி
படச்சி ரித்தண் முப்புர நீறுசெய்
புகைக்க னற்கண் பெற்றவர் காதலி  யருள்பாலா
புவிக்குள் யுத்தம் புத்திரர் சேயர
சனைத்து முற்றுஞ் செற்றிட வேபகை
புகட்டி வைக்குஞ் சக்கிர பாணிதன்  மருகோனே

திகழ்க்க டப்பம் புட்பம தார்புய
மறைத்து ருக்கொண் டற்புத மாகிய
தினைப்பு னத்தின் புற்றுறை பாவையை  யணைசீலா
செகத்தி லுச்சம் பெற்றம ராவதி
யதற்கு மொப்பென் றுற்றழ கேசெறி
திருக்க ழுக்குன் றத்தினில் மேவிய  பெருமாளே.

327. எழுகுநிறை நாபி அரிபிரமர் சோதி
யிலகுமரன் மூவர்  முதலானோர்
இறைவியெனு மாதி பரைமுலையி னூறி
யெழுமமிர்த நாறு  கனிவாயா

புழுகொழுகு காழி கவுணியரில் ஞான
புநிதனென ஏடு  தமிழாலே
புனலிலெதி ரேற சமணர்கழு வேற
பொருதகவி வீர  குருநாதா

மழுவுழைக பால டமரகத்ரி சூல
மணிகரவி நோத  ரருள்பாலா
மலரயனை நீடு சிறைசெய்தவன் வேலை
வளமைபெற வேசெய்  முருகோனே

கழுகுதொழு வேத கிரிசிகரி வீறு
கதிருலவு வாசல்  நிறைவானோர்
கடலொலிய தான மறைதமிழ்க ளோது
கதலிவன மேவு  பெருமாளே.

328. ஓல மிட்ட சுரும்பு தனா தனாவென
வேசி ரத்தில் விழுங்கை பளீர் பளீரென
வோசை பெற்ற சிலம்பு கலீர் கலீரென  விரகலீலை
ஓர்மி டற்றி லெழும்புள் குகூ குகூவென
வேர்வை மெத்த வெழுந்து சலா சலாவென
ரோம குச்சு நிறைந்து சிலீர்சிலீரென  அமுதமாரன்

ஆல யத்து ளிருந்து குபீர் குபீரென
வேகு திக்க வுடம்பு விரீர் விரீரென
ஆர முத்த மணிந்து அளா அளாவென  மருவுமாதர்
ஆசை யிற்கை கலந்து சுமா சுமாபவ
சாக ரத்தி லழுந்தி எழா எழாதுளம்
ஆறெ ழுத்தை நினைந்து குகா குகாவென  வகைவராதோ

மாலை யிட்ட சிரங்கள் செவேல் செவேலென
வேலெ ழுச்சி தரும்பல் வெளேல் வெளேலென
வாகை
 பெற்ற புயங்கள் கறேல் கறேலென  எதிர்கொள்சூரன்
மார்பு மொக்க நெரிந்து கரீல் கரீலென
பேய்கு திக்க நிணங்கள் குழு குழுவென
வாய்புதைத்து விழுந்து ஐயோ ஐயோவென  உதிரமாறாய்

வேலை வற்றி வறண்டு சுறீல் சுறீலென
மாலை வெற்பு மிடிந்து திடீல் திடீலென
மேன்மை பெற்ற ஜனங்கள் ஐயா ஐயாவென  விசைகள்கூற
வேலெ டுத்து நடந்த திவா கராசல
வேடு வப்பெண் மணந்த புயா சலாதமிழ்
வேத வெற்பி லமர்ந்த க்ருபா கராசிவ  குமரவேளே.

329. வேத வெற்பி லேபு னத்தில் மேவி நிற்கு   மபிராம
வேடு வச்சி பாத பத்ம மீது செச்சை  முடிதோய
ஆத ரித்து வேளை புக்க ஆறி ரட்டி  புயநேய
ஆத ரத்தொ டாத ரிக்க ஆன புத்தி  புகல்வாயே
காது முக்ர வீர பத்ர காளி வெட்க  மகுடாமா
காச முட்ட வீசி விட்ட காலர் பத்தி  யிமையோரை
ஓது வித்த நாதர் கற்க வோது வித்த  முனிநாண
ஓரெ ழுத்தி லாறெ ழுத்தை யோதுவித்த  பெருமாளே.

அச்சிறுபாக்கம் (பேறைநகர்)

330. நீலமயில் சேரு மந்தி மாலைநிக ராகி அந்த
காரமிக வேநி றைந்தே  குழலாலும்
நீடுமதி ரேக இன்ப மாகியச லாப சந்த்ர
னேர்தருமு கார விந்த  மதனாலும்

ஆலினிக ரான வுந்தி யாலுமட வார்கள் தங்கள்
ஆசைவலை வீசு கெண்டை  விழியாலும்
ஆடியக டாமி சைந்த வார்முலைக ளாறு மந்த
னாகி மயல் நானு ழன்று  திரிவேனோ

கோல வுரு வாயெ ழுந்து பாரதனை திருமார்பன்
கூவிடுமு ராரி விண்டு  திருமார்பன்
கூடமுறை நீடு செம்பொன் மாமதலை யூடெழுந்த
கோபவரி நார சிங்கன்  மருகோனே

பீலிமயில் மீது றைந்து சூரர்தமை யேசெ யங்கொள்
பேர்பெரிய வேல்கொள் செங்கை  முருகோனே
பேடைமட வோதி மங்கள் கூடிவிளை யாடுகின்ற
பேறைநகர் வாழ வந்த  பெருமாளே.

மயிலம்

331. கொலைகொண்ட போர்விழி கோலோ வாளோ
விடமிஞ்சு பாதக வேலோ சேலோ
குழைகொண்டு லாவிய மீனோ மானோ  எனுமானார்
குயில்தங்கு மாமொழி யாலே நேரே
யிழைதங்கு நூலிடை யாலே மீதூர்
குளிர்கொங்கை மேருவி னாலே நானா  விதமாகி

உலைகொண்ட மாமெழு காயே மோகா
யலையம்பு ராசியி னூடே மூழ்கா
வுடல்பஞ்ச பாதக மாயா நோயா  லழிவேவோ
உறுதண்ட பாசமொ டாரா வாரா
எனையண்டி யேநம னார்தூ தானோர்
உயிர்கொண்டு போய்விடு நாள்நீ மீதா  ளருள்வாயே

அலைகொண்ட வாரிதி கோகோ கோகோ
எனநின்று வாய்விட வேநீள் மாசூ
ரணியஞ்ச ராசனம் வேறாய் நீறா யிடவேதான்
அவிர்கின்ற சோதிய வாரார் நீள்சி
ரனலங்கை வேல்விடும் வீரா தீரா
அருமந்த ரூபக ஏகா வேறோர்  வடிவாகி

மலைகொண்ட வேடுவர் கானூ டேபோய்
குறமங்கை யாளுட னேமா லாயே
மயல்கொண்ட லாயவள் தாள்மீ தேவீழ்  குமரேசா
மதிமிஞ்சு போதக வேலா ஆளா
மகிழ்சம்பு வேதொழு பாதா நாதா
மயிலந்தண் மாமலை வாழ்வே வானோர்  பெருமாளே.

திருச்சி (திரிசிராப்பள்ளி)

332. அங்கை நீட்டிய ழைத்துப் பாரிய
கொங்கை காட்டிம றைத்துச் சீரிய
அன்பு போற்பொய்ந டித்துக் காசள  வுறவாடி
அம்பு தோற்றக ணிட்டுத் தோதக
இன்ப சாஸ்த்ரமு ரைத்துக் கோகிலம்
அன்றில் போற்குர லிட்டுக் கூரிய  நகரேகை

பங்க மாக்கிய லைத்துத் தாடனை
கொண்டு வேட்டையெ ழுப்பிக் காமுகர்
பண்பில் வாய்க்கம யக்கிக் கூடுத  லியல்பாகப்
பண்டி ராப்பகல் சுற்றுச் சூளைகள்
தங்கள் மேற்ப்ரமை விட்டுப் பார்வதி
பங்கர் போற்றியபத்மத் தாள்தொழ  அருள்வாயே

எங்கு மாய்க்குறை வற்றுச் சேதன
அங்க மாய்ப்பரி சுத்தத் தோர்பெறும்
இன்ப மாய்ப்புகழ் முப்பத் தாறினின்  முடிவேறாய்
இந்த்ர கோட்டிம  யக்கத் தான்மிக
மந்த்ர மூர்த்தமெ டுத்துத் தாமத
மின்றி வாழ்த்திய சொர்க்கக் காவல  வயலூர

செங்கை வேற்கொடு துட்டச் சூரனை
வென்று தோற்பறை கொட்டக் கூளிகள்
தின்று கூத்துந டிக்கத் தோகையில்  வரும்வீரா
செம்பொ னாற்றிகழ் சித்ரக் கோபுர
மஞ்சி ராப்பகல் மெத்தச் சூழ்தரு
தென்சி ராப்பளி வெற்பிற் றேவர்கள்  பெருமாளே.

333. அந்தோமன மேநம தாக்கையை
நம்பாதெயி தாகித  சூத்திர
மம்போருக னாடிய பூட்டிது  இனிமேல்நாம்
அஞ்சாதமை யாகிரி யாக்கையை
பஞ்சாடிய வேலவ னார்க்கிய
லங்காகுவம் வாஇனி தாக்கையை  ஒழியாமல்

வந்தோமிது வேகதி யாட்சியு
மிந்தாமயில் வாகனர் சீட்டிது
வந்தாளுவம் நாமென வீக்கிய  சிவநீறும்
வந்தேவெகு வாநமை யாட்கொளு
வந்தார்மத மேதினி மேற்கொள
மைந்தாகும ராவெனு மார்ப்புய  மறவாதே

திந்தோதிமி தீதத மாத்துடி
தந்தாதன னாதன தாத்தன
செம்பூரிகை பேரிகை யார்த்தெழ  மறையோதச்
செங்காடென வேவரு மூர்க்கரை
சங்காரசி காமணி வேற்கொடு
திண்டாடிம காமயில் மேற்கொளு  முருகோனே

இந்தோடிதழ் நாகம காக்கடல்
கங்காளமி னார்சடை சூட்டிய
என்தாதைச தாசிவ கோத்திர  னருள்பாலா
எண்கூடரு ளால்நௌவி நோக்கியை
நன்பூமண மேவிசி ராப்பளி
யென்பார்மன மேதினி நோக்கிய  பெருமாளே.

334. அரிவையர் நெஞ்சுரு காப்புணர்
தருவிர கங்களி னாற்பெரி
தவசம்வி ளைந்துவி டாய்த்தடர்  முலைமேல்வீழ்ந்
தகிலொடு சந்தன சேற்றினில்
முழுகியெ ழுந்தெதிர் கூப்புகை
யடியின கம்பிறை போற்பட  விளையாடிப்

பரிமளம் விஞ்சிய பூக்குழல்
சரியம ருங்குடை போய்ச்சில
பறவைக ளின்குர லாய்க்கயல்  விழிசோரப்
பனிமுக முங்குறு வேர்ப்பெழ
இதழமு துண்டிர வாய்ப்பகல்
பகடியி டும்படி தூர்த்தனை  விடலாமோ

சரியையு டன்க்ரியை போற்றிய
பரமப தம்பெறு வார்க்கருள்
தருகணன் ரங்கபு ரோச்சிதன்  மருகோனே
சயிலமெ றிந்தகை வேற்கொடு
மயிலினில் வந்தெனை யாட்கொளல்
சகமறி யும்படி காட்டிய குருநாதா

திரிபுவ னந்தொழு பார்த்திபன்
மருவிய மண்டப கோட்டிகள்
தெருவில்வி ளங்குசி ராப்பளி  மலைமீதே
தெரியஇ ருந்தப ராக்ரம
உருவளர் குன்றுடை யார்க்கொரு
திலதமெ னும்படி தோற்றிய  பெருமாளே.

335. அழுதழு தாசார நேசமு
முடையவர் போலேபோய் சூழ்வுறும்
அசடிகள் மாலான காமுகர்  பொன்கொடாநாள்
அவருடன் வாய்பேசி  டாமையு
முனிதலு மாறாத தோஷிகள்
அறுதியில் காசாசை வேசைகள்  நஞ்சுதோயும்

விழிகளி னால்மாட வீதியில்
முலைகளை யோராம லாரொடும்
விலையிடு மாமாய ரூபிகள்  பண்பிலாத
விரகிகள் வேதாள மோவென
முறையிடு கோமாள மூளிகள்
வினைசெய  லாலேயெ னாவியு  யங்கலாமோ

வழியினில் வாழ்ஞான போதக
பரமசு வாமீவ ரோதய
வயிலியில் வேலாயு தாவரை  யெங்குமானாய்
மதுரையின் மீதால வாயினில்
எதிரம ணாரோரெ ணாயிரர்
மறிகழு மீதேற நீறுப  ரந்துலாவச்

செழியனு மாளாக வாதுசெய்
கவிமத சீகாழி மாமுனி
சிவசிவ மாதேவ காவென  வந்துபாடுந்
திருவுடை யாய்தீதி லாதவர்
உமையொரு பாலான மேனியர்
சிரகிரி வாழ்வான தேவர்கள்  தம்பிரானே.

336. இளையவர் நெஞ்சத் தளையமெ னுஞ்சிற்
றிடைகொடு வஞ்சிக்  கொடிபோல்வார்
இணையடி கும்பிட் டணியல்குல் பம்பித்
திகழமு துந்துய்த்  தணியாரக்

களபசு கந்தப் புளகித இன்பக்
கனதன கும்பத்   திடைமூழ்குங்
கலவியை நித்தித் திலகிய நின்பொற்
கழல்தொழு மன்பைத்  தருவாயே

தளர்வறு மன்பர்க் குளமெனு மன்றிற்
சதுமறை சந்தத்  தொடுபாடத்
தரிகிட தந்தத் திரிகிட திந்தித்
தகுர்தியெ னுங்கொட்  டுடனாடித்

தெளிவுற வந்துற் றொளிர்சிவ னன்பிற்
சிறுவஅ லங்கல்  றிருமார்பா
செழுமறை யஞ்சொற் பரிபுர சண்டத்
திரிசிர குன்றப்  பெருமாளே.

337. பகலவ னொக்குங் கனவிய ரத்னம்
பவளவெண் முத்தந்  திரமாகப்
பயிலமு லைக்குன் றுடையவர் சுற்றம்
பரிவென வைக்கும்  பணவாசை

அகமகிழ் துட்டன் பகிடிம ருட்கொண்
டழியும வத்தன்  குணவீனன்
அறிவிலி சற்றும் பொறையிலி பெற்றுண்
டலைதலொ ழித்தென்  றருள்வாயே

சகலரு மெச்சும் பரிமள பத்மந்
தருணப தத்திண்  சுரலோகத்
தலைவர்ம கட்குங் குறவர்ம கட்குந்
தழுவஅ ணைக்குந்  திருமார்பா

செகதல மெச்சும் புகழ்வய லிக்குந்
திகுதிகெ னப்பொங்  கியவோசை
திமிலைத விற்றுந் துமிகள்மு ழக்குஞ்
சிரகிரி யிற்கும்  பெருமாளே.

338. ஒருவரொடு கண்கள் ஒருவரொடு கொங்கை
ஒருவரொடு செங்கை  யுறவாடி
ஒருவரொடு சிந்தை ஒருவரொடு நிந்தை
ஒருவரொடி ரண்டு  முரையாரை

மருவமிக அன்பு பெருகவுள தென்று
மனநினையு மிந்த  மருள்தீர
வனசமென வண்டு தனதனன வென்று
மருவுசர ணங்க  ளருளாயோ

அரவமெதிர் கண்டு நடுநடுந டுங்க
அடலிடுப்ர சண்ட  மயில்வீரா
அமரர்முத லன்பர் முனிவர்கள்வ ணங்கி
அடிதொழவி ளங்கு  வயலூரா

திருவையொரு பங்கர் கமலமலர் வந்த
திசைமுகன்ம கிழ்ந்த  பெருமானார்
திகுதகுதி யென்று நடமிட முழங்கு
த்ரிசிரகிரி வந்த  பெருமாளே.

339. குமத வாய்க்கனி யமுத வாக்கினர்
கோலே வேலே சேலே போலே
குழைகள் தாக்கிய விழிக ளாற்களி
கூரா வீறா தீரா மாலா  யவரோடே

உமது தோட்களி லெமது வேட்கையை
ஓரீர் பாரீர் வாரீர் சேரீர்  எவவேநின்
றுடைதொ டாப்பண மிடைபொ றாத்தன
மூடே வீழ்வே னீடே றாதே  யுழல்வேனோ

தமர வாக்கிய அமரர் வாழ்த்திய
தாதா வேமா ஞாதா வேதோ  கையிலேறீ
சயில நாட்டிறை வயலி நாட்டிறை
சாவச மூவா மேவா நீவா  இளையோனே

திமிர ராக்கதர் சமர வேற்கர
தீரா வீரா நேரா தோரா  உமைபாலா
திரிசி ராப்பளி மலையின் மேற்றிகழ்
தேவே கோவே வேளே வானோர்  பெருமாளே.

340. குவளை பூசல்வி ளைத்திடு மங்கயல்
கடுவ தாமெனு மைக்கண் மடந்தையர்
குமுத வாயமு தத்தை நுகர்ந்திசை  பொருகாடை
குயில்பு றாமயில் குக்கில் சுரும்பினம்
வனப தாயுத மொக்கு மெனும்படி
குரல்வி டாஇரு பொற்குட மும்புள  கிதமாகப்

பவள ரேகைப டைத்தத ரங்குறி
யுறவி யாளப டத்தை யணைந்துகை
பரிச தாடன மெய்க்கர ணங்களின்  மதனூலின்
படியி லேசெய்து ருக்கிமு யங்கியெ
அவச மாய்வட பத்ர நெடுஞ்சுழி
படியு மோகச முத்ர மழுந்துத  லொழிவேனோ

தவள ரூபச ரச்சுதி யிந்திரை
ரதிபு லோமசை க்ருத்திகை ரம்பையர்
சமுக சேவித துர்க்கை பயங்கரி  புவனேசை
சகல காரணி சத்தி பரம்பரி
இமய பார்வதி ருத்ரி நிரஞ்சனி
சமய நாயகி நிஷ்களி குண்டலி  யெமதாயி

சிவைம னோமணி சிற்சுக சுந்தரி
கவுரி வேதவி தக்ஷணி யம்பிகை
த்ரிபுரை யாமளை யற்பொடு தந்தருள்  முருகோனே
சிகர கோபுர சித்திர மண்டப
மகர தோரண ரத்ன அலங்க்ருத
திரிசி ராமலை அப்பர் வணங்கிய  பெருமாளே.

341. சத்தி பாணீ நமோநம முத்தி ஞானீ நமோநம
தத்வ வாதீ நமோநம  விந்துநாத
சத்து ரூபா நமோநம ரத்ன தீபா நமோநம
தற்ப்ர தாபா நமோநம  என்றுபாடும்

பத்தி பூணா மலேயுல கத்தின் மானார் சவாதகில்
பச்சை பாடீர பூஷித  கொங்கைமேல்வீழ்
பட்டி மாடான நானுனை விட்டி ராமே யுலோகித
பத்ம சீர்பாத நீயினி  வந்துதாராய்

அத்ர தேவா யுதாசுர ருக்ர சேனா பதீசுகி
யர்க்ய சோமாசி யாகுரு  சம்ப்ரதாயா
அர்ச்ச னாவாக னாவய லிக்குள் வாழ்நாய காபுய
அக்ஷ மாலா தராகுற  மங்கைகோவே

சித்ர கோலா கலாவீர லக்ஷ்மி சாதார தாபல
திக்கு பாலா சிவாகம  தந்த்ரபோதா
சிட்ட நாதா சிராமலை யப்பர் ஸ்வாமீ மகாவ்ருத
தெர்ப்பை யாசார வேதியர்  தம்பிரானே

சென்னிமலை (சிரகிரி)

342. பகலிரவினிற் றடுமாறா; பதிகுருவெனத்  தெளிபோத
ரகசியமுரைத் தநுபூதி; ரதநிலைதனைத்  தருவாயே
இகரபமதற்கிறையோனே; இயலிசையின்முத்  தமிழோனே
சகசிரகிரிப் பதிவேளே; சரவணபவப்  பெருமாளே.

343. புவனத் தொருபொற் றொடிசிற் றுதரக்
கருவிற் பவமுற் றுவிதிப் படியிற்
புணர்துக் கசுகப் பயில்வுற் றுமரித்  திடிலாவி
புரியட் டகமிட் டதுகட் டியிறுக்
கடிகுத் தெனஅச் சம்விளைத் தலறப்
புரள்வித் துவருத் திமணற் சொரிவித்  தனலூடே

தவனப் படவிட் டுயிர்செக் கிலரைத்
தணிபற் களுதிர்த் தெரிசெப் புருவைத்
தழுவப் பணிமுட் களில்கட் டியிசித்  திடவாய்கண்
சலனப் படஎற் றியிறைச் சியறுத்
தயில்வித் துமுரித் துநெரித் துளையத்
தளையிட் டுவருத் தும்யமப் ரகரத்  துயர்தீராய்

பவனத் தையொடுக் குமனக் கவலைப்
ப்ரமையற் றைவகைப் புலனிற் கடிதிற்
படரிச் சையொழித் ததவச் சரியைக்   க்ரியையோகர்
பரிபக் குவர்நிட் டைநிவிர்த் தியினிற்
பரிசுத் தர்விரத் தர்கருத் ததனிற்
பரவப் படுசெய்ப் பதியிற் பரமக்  குருநாதா

சிவனுத் தமனித் தவுருத் திரன்முக்
கணனக் கன்மழுக் கரனுக் ரரணத்
த்ரிபுரத் தையெரித் தருள்சிற் குணனிற்  குணனாதி
செகவித் தனிசப் பொருள்சிற் பரனற்
புதனொப் பிலியுற் பவபத் மதடத்
த்ரிசிரப் புரவெற் புறைசற் குமரப்  பெருமாளே.

344. பொருளின் மேற்ப்ரிய காமா காரிகள்
பரிவு போற்புணர் க்ரீடா பீடிகள்
புருஷர் கோட்டியில் நாணா மோடிகள்  கொங்கைமேலே
புடைவை போட்டிடு மாயா ரூபிகள்
மிடிய ராக்குபொ லாமூ தேவிகள்
புலையர் மாட்டும றாதே கூடிகள்  நெஞ்சமாயம்

கருதொ ணாப்பல கோடா கோடிகள்
விரகி னாற்பலர் மேல்வீழ் வீணிகள்
கலவி சாத்திர நூலே யோதிகள்  தங்களாசைக்
கவிகள் கூப்பிடு மோயா மாரிகள்
அவச மாக்கிடு பேய்நீ ரூணிகள்
கருணை நோக்கமி லாமா பாவிக  ளின்பமாமோ

குருக டாக்ஷக லாவே தாகம
பரம வாக்கிய ஞானா சாரிய
குறைவு தீர்த்தருள் ஸ்வாமீ கார்முக  வன்பரான
கொடிய வேட்டுவர் கோகோ கோவென
மடிய நீட்டிய கூர்வே லாயுத
குருகு ÷க்ஷத்ரபு ரேசா வாசுகி  அஞ்சமாறும்

செரு ராக்ரம கேகே வாகன
சரவ ணோற்பவ மாலா லாளித
திரள்பு யாத்திரி யீரா றாகிய  கந்தவேளே
சிகர தீர்க்கம காசீ கோபுர
முகச டாக்கர சேணா டாக்ருத
திரிசி ராப்பளி வாழ்வே தேவர்கள்  தம்பிரானே.

345. பொருள்கவர் சிந்தை அரிவையர் தங்கள்
புழுககில் சந்து  பனிநீர்தோய்
புளகித கொங்கை யிளகவ டங்கள்
புரளம ருங்கி  லுடைசோர

இருள்வளர் கொண்ட சரியஇ சைந்து
இணைதரு பங்க  அநுராகத்
திரிதலொ ழிந்து மனதுக சிந்து
னிணையடி யென்று  புகழ்வேனோ

மருள்கொடு சென்று பரிவுட னன்று
மலையிலவி ளைந்த  தினைகாவல்
மயிலை மணந்த அயிலவ எங்கள்
வயலியில் வந்த  முருகோனே

தெருளுறு மன்பர் பரவ விளங்கு
திரிசிர குன்றில்  முதனாளில்
தெரிய இருந்த பெரியவர் தந்த
சிறியவ அண்டர்  பெருமாளே.

346. வாசித்துக் காணொ ணாதது
பூசித்துக் கூடொ ணாதது
வாய்விட்டுப் பேசொ ணாதது  நெஞ்சினாலே
மாசர்க்குத் தோணொ ணாதது
நேசர்க்குப் பேரொ ணாதது
மாயைக்குச் சூழொ ணாதது  விந்துநாத

ஓசைக்குத் தூர மானது
மாகத்துக் கீற தானது
லோகத்துக் காதி யானது  கண்டுநாயேன்
யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ்
ஞானத்தைப் போதி யாயினி
யூனத்தைப் போடி டாதும  யங்கலாமோ

ஆசைப்பட் டேனல் காவல்செய்
வேடிச்சிக் காக மாமய
லாகிப்பொற் பாத மேபணி  கந்தவேளே
ஆலித்துச் சேல்கள் பாய்வய
லூரத்திற் காள மோடட
ராரத்தைப் பூண்ம யூரது  ரங்கவீரா

நாசிக்குட் ப்ராண வாயுவை
ரேசித்தெட் டாத யோகிகள்
நாடிற்றுக் காணொ ணாதென  நின்றநாதா
நாகத்துச் சாகை போயுமர்
மேகத்தைச் சேர்சி ராமலை
நாதர்க்குச் சாமி யேசுரர்  தம்பிரானே.

347. வெருட்டி யாட்கொளும் விடமிகள் புடைவையை
நெகிழ்த்த ணாப்பிகள் படிறிகள் சடுதியில்
விருப்ப மாக்கிகள் விரவிய திரவிய  மிலரானால்
வெறுத்து நோக்கிகள் கபடிகள் நடமிடு
பதத்தர் தூர்த்திகள் ம்ருகமத பரிமள
விசித்ர மேற்படுமுலையினு நிலையினு  மெவரோடும்

மருட்டி வேட்கைசொல் மொழியினும் விழியினு
மவிழ்த்த பூக்கமழ் குழலினு நிழலினு
மதிக்கொ ணாத்தள ரிடையினும் நடையினு  மவமேயான்
மயக்க மாய்ப்பொருள் வரும்வகை க்ருஷிபணு
தடத்து மோக்ஷம தருளிய பலமலர்
மணத்த வார்க்கழல்கனவிலுநனவிலு  மறவேனே

இருட்டி லாச்சுர ருலகினி லிலகிய
சகஸ்ர நேத்திர முடையவன் மிடியற
இரøக்ஷ வாய்த்தருள் முருகப னிருகர  குகவீரா
இலக்ஷúமீச்சுர  பசுபதி குருபர
சமஸ்த ராச்சிய ந்ருபபுகழ் வயமியல்
இலக்க ரேய்ப்படை முகடெழு ககபதி  களிகூரத்

திருட்டுராக்ஷதர் பொடிபட வெடிபட
எடுத்த வேற்கொடு கடுகிய முடுகிய
செருக்குவேட்டுவர் திறையிடமுறையிட  மயிலேறும்
செருப்ப ராக்ரம நிதிசர வணபவ
சிவத்த பாற்கர னிமகரன் வலம்வரு
திரிச்சி ராப்பளி மலைமிசை நிலைபெறு  பெருமாளே.

உய்யக்கொண்டான் மலை (திருக்கற்குடி)

348. குடத்தைத் தகர்த்துக் களிற்றைத் துரத்திக்
குவட்டைச் செறுத்துக்  ககசாலக்
குலத்தைக் குமைத்துப் பகட்டிச் செருக்கிக்
குருத்தத் துவத்துத்  தவர்சோரப்

புடைத்துப் பணைத்துப் பெருக்கக் கதித்துப்
புறப்பட்ட கச்சுத்  தனமாதர்
புணர்ச்சிக் சமுத்ரத் திளைப்பற் றிருக்கப்
புரித்துப் பதத்தைத்  தருவாயே

கடத்துப் புனத்துக் குறத்திக்கு மெத்தக்
கருத்திசை யுற்றுப்  பரிவாகக்
கனக்கப்ரி யப்பட் டகப்பட்டு மைக்கட்
கடைப்பட்டு நிற்கைக்  குரியோனே

தடத்துற்ப வித்துச் சுவர்க்கத்த லத்தைத்
தழைப்பித்த கொற்றத்  தனிவேலா
தமிழ்க்குக் கவிக்குப் புகழ்ச்செய்ப் பதிக்குத்
தருக்கற் குடிக்குப்   பெருமாளே.

349.நெறித்துப் பொருப்புக் கொத்த
முலைக்குத் தனத்தைக் கொட்டி
நிறைத்துச் சுகித்துச் சிக்கி  வெகுநாளாய்
நினைத்துக் கொடத்துக் கத்தை
யவத்தைக் கடுக்கைப் பெற்று
நிசத்திற் சுழுத்திப் பட்ட  அடியேனை

இறுக்கிப் பிடித்துக் கட்டி
யுதைத்துத் துடிக்கப் பற்றி
யிழுத்துத் துவைத்துச் சுற்றி  யமதூதர்
எனக்குக் கணக்குக் கட்டு
விரித்துத் தொகைக்குட் பட்ட
இலக்கப் படிக்குத் தக்க  படியேதான்

முறுக்கித் திருப்பிச் சுட்டு
மலத்திற் புகட்டித் திட்டி
முழுக்கக் கலக்கப் பட்டு  அலையாமல்
மொழிக்குத் தரத்துக் குற்ற
தமிழக்குச் சரித்துச் சித்தி
முகத்திற் களிப்புப் பெற்று  மயிலேறி

உறுக்கிச் சினத்துச் சத்தி
யயிற்குத் தரத்தைக் கைக்கு
ளுதிக்கப் பணித்துப் பக்கல்  வருவாயே
உனைச்சொற் றுதிக்கத் தக்க
கருத்தைக் கொடுப்பைச் சித்தி
யுடைக்கற் குடிக்குட் பத்தர்  பெருமாளே.

இரத்தினகிரி (வாட்போக்கி)

350. கயலைச் சருவிப் பிணையொத் தலர்பொற்
கமலத் தியல்மைக்  கணினாலே
கடிமொய்ப் புயலைக் கருதிக் கறுவிக்
கதிர்விட் டெழுமைக்  குழலாலே

நயபொற் கலசத் தினைவெற் பினைமிக்
குளநற் பெருசெப்   பிணையாலே
நலமற் றறிவற் றுணர்வற் றனனற்
கதியெப் படிபெற்  றிடுவோனோ

புயலுற் றியல்மைக் கடலிற் புகுகொக்
கறமுற் சரமுய்த்  தமிழ்வோடும்
பொருதிட் டமரர்க் குறுதுக் கமும்விட்
டொழியப் புகழ்பெற்  றிடுவோனே

செயசித் திரமுத் தமிழுற் பவநற்
செபமுற் பொருளுற்  றருள்வாழ்வே
சிவதைப் பதிரத் தினவெற் பதனிற்
றிகழ்மெய்க் குமரப்  பெருமாளே.

351. சுற்றகப டோடுபல சூதுவினை யானபல
கற்றகள வோடுபழி காரர்கொலை காரர்சலி
சுற்றவிழ லானபவி ÷ஷாடுகடல் மூழ்கிவரு  துயர்மேவித்
துக்கசமு சாரவலை மீனதென கூழில்விழு
செத்தையென மூளுமொரு தீயில்மெழு கானவுடல்
சுத்தமறி யாதபறி காயமதில் மேவிவரு  பொறியாலே

சற்றுமதி யாதகலி காலன்வரு நேரமதில்
தத்துஅறி யாமலொடி யாடிவரு சூதரைவர்
சத்தபரி சானமண ரூபரச மானபொய்மை  விளையாடித்
தக்கமட வார்மனையை நாடியவ ரோடுபல
சித்துவிளை யாடுவினை சீசியிது நாறவுடல்
தத்திமுடி வாகிவிடு வேனொடுமுடி யாதபத  மருள்வாயே

தித்திமித தீதிமித தீதிமித தீமிதத
தத்ததன தானதன தானனன தானனன
திக்குடுடு டூடமட டாடமட டூடுடுடு  எனதாளம்
திக்குமுகி லாடஅரி யாடஅய னாடசிவ
னொத்துவிளை யாடபரை யாடவர ராடபல
திக்கசுரர் வாடசுரர் பாடமறை பாடஎதிர்  களமீதே

எத்திசையு நாடியம னார்நிணமொ டாடபெல
மிக்கநரி யாடகழு தாட கொடி யாடசமர்
எற்றிவரு பூதகண மாடவொளி யாடவிடு  வடிவேலா
எத்தியொரு மானைதினை காவல்வல பூவைதனை
சித்தமலை காமுககு காநமசி வாயனொடு
ரத்னகிரி வாழ்முருக னேயிளைய வாவமரர்  பெருமாளே.

352. பத்தியால் யானுனைப்  பலகாலும்
பற்றியே மாதிருப்  புகழ்பாடி
முத்தனா மாறெனைப்  பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற்  கருள்வாயே
உத்தமா தானசற்  குணர்நேயா
ஒப்பிலா மாமணிக்  கிரிவாசா
வித்தகா ஞானசத்  திநிபாதா
வெற்றிவே லாயுதப்  பெருமாளே.

விராலிமலை

353. சீரான கோல கால நவமணி
மாலாபி ஷேக பார வெகுவித
தேவாதி தேவர் சேவை செயுமுக  மலராறும்
சீராடு வீர மாது மருவிய
ஈராறு தோளு நீளும் வரியளி
சீராக மோது நீப பரிமள  இருதாளும்

ஆராத காதல் வேடர் மடமகள்
ஜீமுத மூர்வ லாரி மடமகள்
ஆதார பூத மாக வலமிட  முறைவாழ்வும்
ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ்
ஞானாபி ராம தாப வடிவமும்
ஆபாத னேனு நாளு நினைவது  பெறவேணும்

ஏராரு மாட கூட மதுரையில்
மீதேறி மாறி யாடு மிறையவர்
ஏழேழு பேர்கள் கூற வருபொரு  ளதிகாரம்
ஈடாய வூமர் போல வணிகரி
லூடாடி யால வாயில் விதிசெய்த
லீலாவி சார தீர வரதா  குருநாதா

கூராழி யால்முன் வீய நினைபவ
னீடேறு மாறு பாநு மறைவுசெய்
கோபால ராய னேய முளதிரு  மருகோனே
கோடாம லார வார அலையெறி
காவேரி யாறு பாயும் வயலியில்
கோனாடு சூழ்வி ராலி மலையுறை  பெருமாளே.

354. பா தாள மாதி லோக நிகிலமு
மா தார மான மேரு வெனவளர்
பா டீர பார மான முலையினை  விலைகூறிப்
பா லோடு பாகுதேனெ னினியசொ
லா லேய நேக மோக மிடுபவர்
பாதாதி கேச மாக வகைவகை  கவிபாடும்

வே தாள ஞான கீனன் விதரண
நா தானி லாத பாவி யநிஜவன்
வீ ணாள்ப டாத போத தவமிலி  பசுபாச
வ்யா பார மூடன் யானு முனதிரு
சீர் பாத தூளி யாகி நரகிடை
வீ ழாம லேசு வாமி திருவருள்  புரிவாயே

தூ தாள ரோடு காலன் வெருவிட
வே தாமு ராரி யோட அடுபடை
சோ ராவ லாரி சேனை பொடிபட  மறைவேள்விச்
சோ மாசி மார்சி வாய நமவென
மா மாய வீர கோர முடனிகல்
சூர் மாள வேலை யேவும் வயலியி   லிளையோனே

கூ தாள நீப நாக மலர்மிசை
சா தாரி தேசி நாம க்ரியைமுதல்
கோலால நாத கீத மதுகர  மடர்சோலை
கூ ராரல் தேரு நாரை மருவிய
கா னாறு பாயு மேவி வயல்பயில்
கோ னாடு சூழ்வி ராலி மலையுறை  பெருமாளே.

355. இலாபமில் பொலாவுரை சொலாமன தபோதன
ரியாவரு மிராவுபக  லடியேனை
இராகமும் விநோதமு முலோபமு டன்மோகமு
மிலானிவ னுமாபுருஷ  னெனஏய

சலாபவ மலாகர சசீதர விதாரண
சதாசிவ மயேசுரச  கலலோக
சராசர வியாபக பராபர மநோலய
சமாதிய நுபூதிபெற  நினைவாயே

நிலாவிரி நிலாமதி நிலாதவ நிலாசன
நியாயப ரிபாலஅர  நதிசூடி
நிசாசர குலாதிப திராவண புயாரிட
நிராமய சரோருகர  னருள்பாலா

விலாசுகம் வலாரெனு முலாசவிதாகவ
வியாதர்கள் விநோதமகள்  மணவாளா
விராவுவ யலார்புரி சிராமலை பிரான்மலை
விராலிம லைமீதிலுறை  பெருமாளே.

356. நிராமய புராதன பராபர வராம்ருத
நிராகுல சிராதிகப்  ப்ரபையாகி
நிராசசி வராஜத வராஜர்கள் பராவிய
நிராயுத புராரியச்  சுதன்வேதா

சுராலய தராதல சராசர பிராணிகள்
சொரூபமி வராதியைக்  குறியாமே
துரால்புகழ் பாரதின கராவுள பராமுக
துரோகரை தராசையுற்  றடைவேனோ

இராகவ இராமன்முன் இராவண இராவண
இராவண இராஜனுட்  குடன்மாய்வென்
றிராகன்ம லாராணிஜ புராணர்கு மராகலை
யிராஜசொ லவாரணர்க்  கிளையோனே

விராகவ சுராதிப பொராதுத விராதடு
விராயண பராயணச்  செருவூரா
விராவிய குராவகில் பராரைமு திராவளர்
விராலிம லைராஜதப்  பெருமாளே.

357. இதமுறு விரைபுனல் முழுகி யகில்மண
முதவிய புகையினி லளவி வகைவகை
கொத்தலர்க ளின்தொடையல் வைத்துவளர்  கொண்டலென

அறலென இசையளி யனெந ளிருளென
நிறமது கருகிநெ டுகிநெ றிவுபட
நெய்த்துமுசு வின்திரிசை யொத்தசுருள்  குந்தளமும்

இலகிய பிறையென எயினர் சிலையென
விலகிய திலதநு தலும திமுகமும்
உற்பலமும் வண்டுவடு விற்கணைய மன்படரு  முனைவாளும்

இடர்படு கவுநடு வனும்வ லடல்பொரு
கடுவது மெனநெடி தடுவ கொடியன
இக்குசிலை கொண்டமதன் மெய்த்தவநி  றைந்தவிழி

தளவன முறுவலு மமுத குமுதமும்
விளைநற வினியமொ ழியுமி னையதென
ஒப்பறுந கங்கள்விரல் துப்பெனவு  றைந்துகமு

கிடியொடி படவினை செயும்வின் மதகலை
நெடியக வுடியிசை முரலு சுரிமுக
நத்தனைய கண்டமும்வெண்முத் துவிளைவிண்டனைய  எழில்தோளும்

விதரண மனவித னமதை யருள்வன
சததள மரைமுகி ழதனை நிகர்வன
புத்தமிர்து கந்தகுடம் வெற்பெனநி  ரம்புவன

இமசல ம்ருகமத களப பரிமள
தமனிய ப்ரபைமிகு தருண புளகித
சித்ரவர மங்கலவி சித்ரவிரு  துங்ககன

விகலித மிருதுள ம்ருதுள நவமணி
முகபட விகடின தனமு முயர்வட
பத்திரமி ருந்தகடி லொத்தசுழி யுந்தியுள  மதியாத

விபரித முடையிடை  யிளைஞர் களைபட
அபகட மதுபுரி யரவ சுடிகைய
ரத்நபண மென்பவழ குற்றவரை  யும்புதிய

நுணியத ளிரெனவு லவிய பரிபுர
அணிநட னபதமு முடைய வடிவினர்
பொற்கலவி யின்பமதி துக்கமென  லன்றியவர்

விரகினி லெனதுறு மனம துருகிய
பிரமையு மறவுன தருள்கை வரவுயர்
பத்திவழி யும்பரம முத்திநெறி யுந்தெரிவ  தொருநாளே;

தததத தததத ததத தததத
திதிதிதி திதிதிதி திதிதி திதிதிதி
தத்ததத தந்ததத தித்திதிதி  திந்திதிதி

டகுடகு டிகுடிகு டகுக டிகுடிகு
டிகுடிகு டகுடகு டிகுகு டகுடகு
தத்ததிமி டங்குகுகு தித்திதிமி  டிங்குகுகு

தமிதமி தமிதக தமித திமிதக
திமிதிமி செககண திமித திகதிக
தத்திமிகத தந்திமித தித்திமிதி திந்திமிதி  யெனவேதான்

தபலைகு டமுழவு திமிலை படகம
தபுதச லிகைதவில் முரசு கரடிகை
மத்தளித வண்டையற வைத்தகுணி  துந்துமிகள்

மொகுமொகு மொகுவென அலற விருதுகள்
திகுதிகு திகுவென அலகை குறளிகள்
விக்கிடநி ணம்பருக பக்கியுவ  ணங்கழுகு

சதிர்பெற அதிர்தர உததி சுவறிட
எதிர்பொரு நிருதர்கள் குருதி பெருகிட
வப்புவின்மி தந்தெழுப தற்புதக வந்தமெழ  வெகுகோடி;

மதகஜ துரகர தமுமு டையபுவி
யதலமு தல்முடிய இடிய  நெடியதொர்
மிக்கொலிமு ழங்கஇரு ளக்கணம்வி  டிந்துவிட

இரவியு மதியமு நிலைமை பெறஅடி
பரவிய அமரர்கள் தலைமை பெறஇய
லத்திறல ணங்குசெய சத்திவிடு  கந்ததிரு

வயலியி லடிமைய குடிமை யினலற
மயலொடு மலமற அரிய பெரியதி
ருப்புகழ்வி ளம்புவென்மு னற்புதமெ ழுந்தருள்கு  கவிராலி

மலையுறை குரவந லிறைவ வருகலை
பலதெரி விதரண முருக சரவண
உற்பவக்ர வுஞ்சகிரி நிக்ரகஅ  கண்டமய

நிருபவி மலசுக சொருப பரசிவ
குருபர வெளிமுக டுருவ வுயர்தரு
சக்ரகிரி யுங்குலைய விக்ரமந  டம்புரியு

மரகத கலபமெ ரிவிடு மயில்மிசை
மருவியெ யருமைய இளமை யுருவொடு
சொர்க்கதல மும்புலவர் வர்க்கமும்வி ளங்கவரு  பெருமாளே.

358. உருவேற வேஜெ பித்து வொருகோடி யோம சித்தி
யுடனாக ஆக மத்து  கந்துபேணி
உணர்வாசை யாரி டத்து மருவாது வோரெ ழுத்தை
யொழியாது வூதை விட்டி  ருந்துநாளும்

தரியாத போத கத்தர் குருவாவ ரோரொ ருத்தர்
தருவார்கள் ஞான வித்தை  தஞ்சமாமோ
தழலாடி வீதி வட்ட மொளிபோத ஞான சித்தி
தருமாகி லாகு மத்தை  கண்டிலேனே

குருநாடி ராச ரிக்கர் துரியோத னாதி வர்க்க
குடிமாள மாய மிட்டு  குந்திபாலர்
குலையாமல் நீதி கட்டி யெழுபாரை யாள விட்ட
குறளாக னூறில் நெட்டை  கொண்டஆதி

மருகா புராரி சித்தன் மகனே விராலி சித்ர
மலைமே லுலாவு சித்த  அங்கைவேலா
மதுரா புரேசர் மெய்க்க அரசாளு மாறன் வெப்பு
வளைகூனை யேநி மிர்த்த  தம்பிரானே.

359. எதிரெதிர்கண் டோடி யாட்கள்
களவதறிந் தாசை பூட்டி
இடறிவிழும் பாழி காட்டு  மடமாதர்
இறைவைகொளுங்  கூவல் மூத்த
கறையொழுகுந் தாரை பார்க்கி
லிளமைகொடுங் காத லாற்றில்  நிலையாத

அதிவிகடம் பீழ லாற்ற
அழுகிவிழும் பீற லூத்தை
அடையுமிடஞ் சிலை தீற்று  கருவாயில்
அருவிசலம் பாயு மோட்டை
அடைவுகெடுந் தூரை பாழ்த்த
அளறிலழுந் தாம லாட்கொ  டருள்வாயே

விதுரனெடுந் த்ரோண மேற்று
எதிர்பொருமம் பாதி யேற்றி
விரகினெழுந் தோய நூற்று  வருமாள
விரவுஜெயன் காளி காட்டில்
வருதருமன் தூத  னீற்ற
விஜயனெடும் பாக தீர்த்தன்  மருகோனே

மதியணையும் சோலை யார்த்து
மதிவளசந் தான கோட்டின்
வழியருளின் பேறு காட்டி  யவிராலி
மலைமருவும் பாதி யேற்றி
கடிகமழ்சந் தான கோட்டில்
வழியருளின் பேறு காட்டு  பெருமாளே.

360. ஐந்து பூதமு மாறு சமயமு
மந்த்ர வேதபு ராண கலைகளும்
ஐம்ப தோர்வித மான லிபிகளும்  வெகுரூப
அண்ட ராதிச ராச ரமுமுயர்
புண்ட ரீகனு மேக நிறவனும்
அந்தி போலுரு வானு நிலவொடு  வெயில்காலும்

சந்த்ர சூரியர் தாமு மசபையும்
விந்து நாதமு  மேக வடிவம
தன்சொ ரூபம தாக வுறைவது  சிவயோகம்
தங்க ளாணவ மாயை கருமம
லங்கள் போயுப தேச குருபர
சம்ப்ர தாயமொ டேயு நெறியது  பெறுவேனோ

வந்த தானவர் சேனை கெடிபுக
இந்த்ர லோகம்வி பூதர் குடிபுக
மண்டு பூதப சாசு பசிகெட  மயிடாரி
வன்கண் வீரியி டாரி ஹரஹர
சங்க ராஎன மேரு கிரிதலை
மண்டு தூளெழ வேலை யுருவிய  வயலூரா

வெந்த நீறணி வேணி யிருடிகள்
பந்த பாசவி கார பரவச
வென்றி யானச மாதி முறுகுகல்  முழைகூடும்
விண்டு மேல்மயி லாட இனியக
ளுண்டு காரளி பாட இதழிபொன்
விஞ்ச வீசுவி ராலி மலையுறை  பெருமாளே.

361. கரதல முங்குறி கொண்ட கண்டமும்
விரவியெ ழுந்துசு ருண்டு வண்டடர்
கனவிய கொண்டைகு லைந்த லைந்திட
களபசு கந்தமி குந்த கொங்கைக
ளிளகமு யங்கிம யங்கி யன்புசெய்
கனியித ழுண்டுது வண்டு பஞ்சணை  மிசைவீழா

இரதம ருந்தியு றுங்க ருங்கயல்
பொருதுசி வந்துகு விந்தி டும்படி
யிதவிய வுந்தியெ னுந்த டந்தனி  லுறமூழ்கி
இனியதொ ரின்பம்வி ளைந்த ளைந்துபொய்
வனிதையர் தங்கள்மருங்கி ணங்கிய
இளமைகி ழம்படு முன்ப தம்பெற்  வுணர்வேனோ

பரத சிலம்புபு லம்பு மம்பத
வரிமுக எண்கினு டன்கு ரங்கணி
பணிவிடை சென்றுமு யன்ற குன்றணி  யிடையேபோய்ப்
பகடியி லங்கைக லங்க அம்பொனின்
மகுடசி ரந்தச முந்து ணிந்தெழு
படியு நடுங்கவி ழும்ப னம்பழ  மெனவாகும்

மருதமு தைந்தமு குந்த னன்புறு
மருககு விந்தும லர்ந்த பங்கய
வயலியில் வம்பவிழ் சண்ப கம்பெரி  யவிராலி
மலையில் விளங்கிய கந்த என்றுனை
மகிழ்வொடு வந்திசெய் மைந்த னென்றனை
வழிவழி யன்புசெய் தொண்டு கொண்டருள்  பெருமாளே.

362. கரிபு ராரி காமாரி திரிபு ராரி தீயாடி
கயிலை யாளி காபாலி  கழையோனி
கரவு தாச னாசாரி பரசு பாணி பானாளி
கணமொ டாடி காயோகி  சிவயோகி

பரம யோகி மாயோகி பரிய ராஜ டாசூடி
பகரொ ணாத மாஞானி  பசுவேறி
பரத மாடி கானாடி பரவ யோதி காதீத
பரம ஞான வூர்பூத  அருளாளோ

சுருதி யாடி தாதாவி வெருவி யோட மூதேவி
துரக கோப மீதோடி  வடமேரு
சுழல வேலை தீமூள அழுத ளாவி வாய்பாறி
சுரதி னோடு சூர்மாள  வுலகேழும்

திகிரி மாதி ராவார திகிரி சாய வேதாள
திரளி னோடு பாறோடு  கழுகாடச்
செருவி னாடு வானீப கருணை மேரு வேபார
திருவி ராலி யூர்மேவு  பெருமாளே.

363. காமாத்திர மாகி யிளைஞர்கள் வாழ்நாட்கொடு போகி யழகிய
காதாட்டிய பார இருகுழை  யளவோடிக்
கார்போற்றவ ழோதி நிழல்தனி லார்வாட்கடை யீடு கனகொடு
காலேற்றுவை வேலின் முனைகடை  யமதூதர்

ஏமாப்பற மோக வியல்செய்து நீலோற்பல ஆசில்மலருட
னேராட்டவி நோத மிடும்விழி  மடவார்பால்
ஏகாப்பழி பூணு மருளற நீதோற்றிமு னாளு மடிமையை
யீடேற்றுத லாலுன் வலிமையை  மறவேனே

சீமாட்டியு மாய திரிபுரை காலாக்கினி கோப பயிரவி
சீலோத்தமி நீலி சுரதிரி  புவனேசை
சீகார்த்திகை யாய அறுவகை மாதாக்கள்கு மார னென்வெகு
சீராட்டொடு பேண வடதிசை  கயிலாசக்

கோமாற்குப தேச முபநிட வேதார்த்தமெய்ஞ் ஞான நெறியருள்
கோதாட்டிய ஸ்வாமி யெனவரு  மிளையோனே
கோடாச்சிவ பூஜை பவுருஷ மாறாக்கொடை நாளு மருவிய
கோனாட்டுவி ராலி மலையுறை  பெருமாளே.

364. கொடாதவனை யேபு கழ்ந்து குபேரனென வேமொழிந்து
குலாவியவ மேதி ரிந்து  புவிமீதே
எடாதசுமை யேசு மந்து எணாதகலி யால்மெ லிந்து
எலாவறுமை தீர அன்று  னருள்பேணேன்

சுடாததன மான கொங்கை களாலிதய மேம யங்கி
சுகாதரம தாயொ ழுங்கி  லொழுகாமல்
கெடாததவ மேம றைந்து கிலேசமது வேமி குந்து
கிலாதவுட லாவி நொந்து  மடியாமுன்

தொடாய்மறவி யேநி யென்ற சொலாகியது னாவ ருங்கொல்
சொலேழுலக மீனு மம்பை  யருள்பாலா
நடாதசுழி மூல விந்து நளாவிவிளை ஞான நம்ப
நபோமணி சமான துங்க  வடிவேலா

படாதகுளிர் சோலையண்ட மளாவியுயர் வாய்வளர்ந்து
பசேலெனவு மேத ழைந்து  தினமேதான்
விடாதுமழை மாரி சிந்த அநேகமலர் வாவி பொங்கு
விராலிமலை மீது கந்த  பெருமாளே.

365. மாயா சொரூப முழுச்ச மத்திகள்
ஓயா வுபாய மனப்ப சப்பிகள்
வாணாளை யீரும் விழிக்க டைச்சிகள்  முனிவோரு
மாலாகி வாட நகைத்து ருக்கிகள்
ஏகாச மீது தனத்தி றப்பிகள்
வாரீ ரிரீரென் முழுப்பு ரட்டிகள்  வெகுமோ

ஆயாத வாசை யெழுப்பு மெத்திகள்
ஈயாத போதி லறப்பி ணக்கிகள்
ஆவேச நீருண் மதப்பொ றிச்சிகள்  பழிபாவம்
ஆமா றெணொத திருட்டு மட்டைகள்
கோமாள மான குறிக்க ழுத்திகள்
ஆசார வீன விலைத்த னத்திய  ருறவாமோ

காயாத பால்நெய் தயிர்க்கு டத்தினை
ஏயா வெணாம லெடுத்தி டைச்சிகள்
காணாத வாறு குடிக்கு மப்பொழு  துரலோடே
கார்போலு மேனி தனைப்பி ணித்தொரு
போர்போ லசோதை பிடித்த டித்திட
காதோடு காது கையிற்பி டித்தழு  தினிதூதும்

வேயா லநேக விதப்ப சுத்திரள்
சாயாமல் மீள அழைக்கு மச்சுதன்
வீறான மாம னெனப்ப டைத்தருள்  வயலூரா
வீணாள் கொடாத படைச்செ ருக்கினில்
சூர்மாள வேலை விடுக்கும் அற்புத
வேலா விராலி மலைத்த லத்துறை  பெருமாளே.

366.மாலாசை கோப மோயாதெ நாளு
மாயா விகார  வழியேசெல்
மாபாவி காளி தானேனு நாத
மாதா பிதாவு  மினிநீயே

நாலான வேத நூலாக மாதி
நானோதி னேனு  மிலைவீணே
நாள்போய் விடாம லாறாது மீதில்
ஞானனோப தேச  மருள்வாயே

பாலா கலார ஆமோத லேப
பாடீர வாக  அணிமீதே
பாதாள பூமி யாதார மீன
பானீய மேலை  வயலூரா

வேலா விராலி வாழ்வே சமூக
வேதாள பூத  பதிசேயே
வீரா கடோர சூராரி யேசெ
வேளே சுரேசர்  பெருமாளே.

367. மேக மெனுங்குழல் சாய்த்திரு
கோக னகங்கொடு கோத்தணை
மேல்விழு கின்ற பராக்கினி  லுடைசோர
மேகலை யுந்தனி போய்த்தனி
யேகர ணங்களு மாய்க்கயல்
வேல்விழி யுங்குவி யாக்குரல்  மயில்காடை

கோகில மென்றெழ போய்க்கனி
வாயமு துண்டுரு காக்களி
கூரவு டன்பிரி யாக்கல  வியின்மூழ்கிக்
கூடி முயங்கி விடாய்த்திரு
பார தனங்களின் மேற்றுயில்
கூரினு மம்புய தாட்டுணை  மறவேனே

மோகர துந்துபி யார்ப்பவி
ராலி விலங்கலின் வீட்டதில்
மூவுல குந்தோழு தேத்திட  வுறைவோனே
மூதிசை முன்பொரு காற்றட
மேருவை யம்பினில் வீழ்த்திய
மோகன சங்கரி வாழ்த்திட  மதியாமல்

ஆக மடிந்திட வேற்கொடு
சூரனை வென்றடல் போய்த்தணி
யாமையின் வென்றவ னாற்பிற்  கிடுதேவர்
ஆதி யிளந்தலை காத்தர
சாள அவன்சிறை மீட்டவ
னாளுல கங்குடி யேற்றிய  பெருமாளே.

368. மோதி யிறுகிவட மேரு வெனவளரு
மோக முலையசைய  வந்துகாயம்
மோச மிடுமவர்கள் மாயை தனில்முழுகி
மூட மென அறிவு  கொண்டதாலே

காதி வருமியம தூதர் கயிறுகொடு
காலி லிறுகஎனை  வந்திழாதே
காவ லெனவிரைய வோடி யுனதடிமை
காண வருவதினி  யெந்தநாளோ

ஆதி மறையவனு மாலு முயர்சுடலை
யாடு மரனுமிவ  ரொன்றதான
ஆயி யமலைதிரி சூலி குமரிமக
மாயி கவுரியுமை  தந்தவாழ்வே

சோதி நிலவுகதிர் வீசு மதியின் மிசை
தோய வளர்கிரியி  னுந்திநீடு
சோலை செறிவுளவு ராலி நகரில்வளர்
தோகை மயிலுலவு  தம்பிரானே.

பிள்ளையார் பட்டி (விநாயகமலை)

369. சரவண ஜாதா நமோநம கருணைய தீதா நமோநம
சததள பாதா நமோநம  அபிராம
தருணக தீரா நமோநம நிருபமர் வீரா நமோநம
சமதள வூரா நமோநம  ஜகதீச

பரமசொ ரூபா நமோநம சுரர்பதி பூபா நமோநம
பரிமள நீபா நமோநம  உமைகாளி
பகவதி பாலா நமோநம இகபர மூலா நமோநம
பவுருஷ சீலா நமோநம  அருள்தாராய்

இரவியு மாகாச பூமியும் விரவிய தூளேற வானவ
ரெவர்களு மீடேற ஏழ்கடல்  முறையோவென்
றிடர்பட மாமேரு பூதர மிடிபட வேதானி சாசர
ரிகல்கெட மாவேக நீடயில்  விடுவோனே

மரகத ஆகார ஆயனு மிரணிய ஆகார வேதனும்
வசுவெனு மாகார ஈசனு  மடிபேண
மயிலுறை வாழ்வேவி நாயக மலையுறை வேலாம கீதர
வனசர ராதார மாகிய  பெருமாளே.

திருச்செங்கோடு (கொடிமாட செங்குன்றூர்)

370. அன்பாக வந்து உன்றாள்ப ணிந்து
ஐம்பூத மொன்ற  நினையாமல்
அன்பால்மி குந்து நஞ்சாரு கண்க
ளம்போரு கங்கள்  முலைதானும்

கொந்தேமி குந்து வண்டாடி நின்று
கொண்டாடு கின்ற  குழலாரைக்
கொண்டேநி னைந்து மன்பேது மண்டி
குன்றாம லைந்து  அலைவேனோ

மன்றாடி தந்த மைந்தாமி குந்த
வம்பார் கடம்பை  யணிவோனே
வந்தேப ணிந்து நின்றார் பவங்கள்
வம்பே தொலைந்த  வடிவேலா

சென்றே யிடங்கள் கந்தாஎ னும்பொ
செஞ்சேவல்  கொண்டு  வரவேணும்
செஞ்சாலி கஞ்ச மொன்றாய் வளர்ந்த
செங்கோட மர்ந்த  பெருமாளே.

371. பந்தாடி யங்கை நொந்தார்ப ரிந்து
பைந்தார்பு னைந்த  குழல்மீதே
பண்பார் சுரும்பு பண்பாடு கின்ற
பங்கே ருகங்கொள்  முகமீதே

மந்தார மன்றல் சந்தார மொன்றி
வன்பாத கஞ்செய்  தனமீதே
மண்டாசை கொண்டு விண்டாவி நைந்து
மங்காம லுன்ற  னருள்தாராய்

கந்தா அரன்றன் மைந்தா விளங்கு
கன்றா முகுந்தன்  மருகோனே
கன்றா விலங்க லொன்றாறு கண்ட
கண்டா வரம்பை  மணவாளா

செந்தா தடர்ந்த கொந்தார் கடம்பு
திண்டோள் நிரம்ப  அணிவோனே
திண்கோ டரங்க ளெண்கோ டுறங்கு
செங்கோ டமர்ந்த  பெருமாளே.

372. வண்டார் மதங்க ளுண்டே மயங்கி
வந்தூரு கொண்ட  லதனோடும்
வண்காம னம்பு தன்கால் மடங்க
வன்போர் மலைந்த  விழிவேலும்

கொண்டே வளைந்து கண்டார் தியங்க
நின்றார் குரும்பை  முலைமேவிக்
கொந்தா ரரும்பு நின்தாள் மறந்து
குன்றாம லுன்ற  னருள்தாராய்

பண்டாழி சங்கு கொண்டாழி தங்கு
பண்போ னுகந்த  மருகோனே
பண்சார நைந்து நண்போது மன்பர்
பங்காகி நின்ற  குமரேசா

செண்டாடி யண்டர் கொண்டாட மன்றில்
நின்றாடி சிந்தை  மகிழ்வாழ்வே
செஞ்சாலி மிஞ்சி மஞ்சாடு கின்ற
செங்கோ டமர்ந்த  பெருமாளே.

373. கரையற வுருகுதல் தருகயல் விழியினர்
கண்டான செஞ்சொல்  மடமாதர்
கலவியல் முழுகிய நெறியினி லறிவுக
லங்காம யங்கும்  வினையேனும்

உரையையு மறிவையும் உயிரையு முணர்வையும்
உன்பாத கஞ்ச  மலர்மீதே
உரவொடு புனைதர நினைதரு மடியரொ
டொன்றாக என்று  பெறுவேனோ

வரையிரு துணிபட வளைபடு சுரர்குடி
வந்தேற இந்த்ர  புரிவாழ
மதவித கஜரத துரகத பததியின்
வன்சேனை மங்க  முதுமீன

திரைமலி சலநிதி முறையிட நிசிசரர்
திண்டாட வென்ற  கதிர்வேலா
ஜெகதல  மிடிகெட விளைவன வயலணி
செங்கோட மர்ந்த  பெருமாளே.

374. இடம்பார்த் திடம்பார்த் திதங்கேட் டிரந்தேற்
றிணங்காப் பசிப்பொங்  கனல்மூழ்கி
இறுங்காற் கிறுங்கார்க் கிரும்பார்க் குநெஞ்சார்க்
கிரங்கார்க் கியற்றண்  டமிழ்நூலின்

உடம்பாட் டுடன்பாட் டியம்பாத் தயங்காத்
துளங்காத் திடப்புன்  கவிபாடி
ஒதுங்காப் பொதுங்காப் பதுங்காப் புகன்றேத்
துறும்பாற் குணக்கன்  புறலாமோ

கடந்தோற் கடந்தோற் றறிந்தாட் கருந்தாட்
கணைந்தாட் கணித்திண்  புயமீவாய்
கரும்போற் கரும்போர்க் குளங்காட் டிகண்டேத்
துசெங்கோட் டில்நிற்குங்  கதிர்வேலா

அடைந்தோர்க் குணந்தோர்க் களிந்தோர்க் கமைந்தோர்க்
கவிழ்ந்தோர்க் குணற்கொன்  றிலதாகி
அலைந்தோர்க் குலைந்தோர்க் கினைந்தோர்க் கலந்தோர்க்
கறிந்தோர்க் களிக்கும்  பெருமாளே.

375. கலக்குங் கோதற வடிக்குஞ் சீரிய
கருப்பஞ் சாறெனு  மொழியாலே
கருத்தும் பார்வையு முருக்கும் பாவிகள்
கடைக்கண் பார்வையி  லழியாதே

விலக்கும் போதக மெனக்கென் றேபெற
விருப்பஞ் சாலவு  முடையேனான்
விடைக்கொண் டேமன நினைக்குந் தீமையை
விடற்கஞ் சேலென  அருள்வாயே

அலைக்குந் தானவர் குலத்தின் சேனையை
அறுக்குங் கூரிய  வடிவேலா
அழைத்துன் சீரிய கழற்செந் தாமரை
யடுக்கும் போதக  முடையோராம்

சிலர்க்கன் றேகதி பலிக்குந் தேசிக
திருச்செங் கோபுர  வயலூரா
திதிக்கும் பார்வயின் மதிப்புண் டாகிய
திருச்செங் கோடுறை  பெருமாளே.

 
மேலும் திருப்புகழ் »
temple news
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முதலாம் பகுதி விநாயகர் துதி 1. கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரிகப்பிய ... மேலும்
 
temple news
66. மூளும்வினை சேர மேல்கொண்டி டாஐந்துபூதவெகு வாய மாயங்கள் தானெஞ்சில்மூடிநெறி நீதி யே துஞ்செ யாவஞ்சி  ... மேலும்
 
temple news
177. மந்தரம தெனவேசி றந்தகும்பமுலை தனிலேபு னைந்தமஞ்சள்மண மதுவேது லங்க  வகைபேசிமன்றுகமழ் தெருவீதி ... மேலும்
 
temple news
124. தகர நறுமலர் பொதுளிய குழலியர்கலக கெருவித விழிவலை படவிதிதலையி லெழுதியு மனைவயி னுறவிடு  வதனாலேதனையர் ... மேலும்
 
temple news
242. புமியதனிற் ப்ரபுவான புகலியில்வித் தகர்போல;அமிர்தகவித் தொடைபாட அடிமைதனக் கருள்வாயே;சமரிலெதிர்த் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar