பாலசமுத்திரம்; பழநி, பாலசமுத்திரம், அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்ஸவ விழாவில் தேரோட்டம் நடந்தது.
பழநி, முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட பாலசமுத்திரம், அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் செப்.2., காலை கோயிலில் ஆவணி பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றம் நடைபெற்றது. செப்.,8 மாலை திருமகள், மண்மகள் அகோபில வரதராஜ சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. செப்.9., இரவு பாரிவேட்டை நடைபெறும். நேற்று (செப்.,10.,)காலை 6:30 மணிக்கு மேல் தேரில் திருமகள், மண்மகள்,அகோபில வரதராஜ பெருமாள் சுவாமி தேரேற்றம் நடைபெற்றது. காலை 7:30 திருத்தேர் வடம் பிடித்து பாலசமுத்திரம் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. நிகழ்ச்சியில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, கண்காணிப்பாளர் அழகர்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். பிரம்மோற்சவ திருவிழா நாட்களில் பவளக்கால் சப்பரம்,அனுமார் வாகனம், கருட வாகனம், தோளூக்கினியாள், சேஷ வாகனம் ஆகியவற்றில் சுவாமி புறப்பாடு நடைபெறும். செப்.12., விடையாற்றி உற்சவத்திற்கு பிறகு திருவிழா நிறைவடைய உள்ளது.