Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாயவர் கோயில்! தெய்வக் கிளிகள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
திருமாலின் குணங்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2011
05:07

திருமாலுக்குரிய குணங்களாகக் கூறப் பெறுவனவற்றுள் நான்கு குணங்கள் மிகச் சிறப்பாகப் போற்றப் பெறுபவை.

அவை 1. வாத்சல்யம், 2. சுவாமித்துவம், 3. சௌசீல்யம், 4. சௌலப்யம் என்பனவாகும்.

வாத்சல்யம் என்பது கன்றிடம் தாய்ப்பசு கொள்கிற அன்பாகும் திருமாலுக்குரிய இக்குணம் கண்ணன் அவதாரத்திலே மிகுதியாக வெளிப்படுகிறது.
குசேலரிடத்திலும் பாண்டவர் மற்றும் திரௌபதியிடமும் மிகுதியாகக் காட்டினார். அர்ச்சுனனுக்குப் போர்க்களத்தில் அவனது குற்றம் நோக்காது உண்மைப் பொருளின் சிறப்பை உணர்த்திய திறத்தால் அவனுடைய வாத்சல்ய குணம் விளங்குகிறது. சுவாமித்துவம் என்பது கடவுளர்க்கெல்லாம் தலைமைத் தன்மை உடையவனாகும் சிறப்பைக் கூறுவது. இச்சிறப்பு அனைத்து அவதாரங்களிலும் வெளிப்பட்ட போதிலும் கண்ணன் அவதாரமே அத்தகைய சிறப்புக்கு உறைவிடமாக இருக்கிறது. பகவத் கீதையை உரைக்கையில் தன்னுடைய கடவுள் தன்மையை உணரும் பொருட்டாக அர்ச்சுனனுக்கு பரத்துவத்தை விளக்கியமையால் இக்குணத்தின் சிறப்பு விளங்குகிறது. சௌசீல்யம் என்பது ஏற்றத் தாழ்வின்றி உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடின்றி கொண்டிருக்கும் நட்பைக் குறிப்பது. இக்குணமும் கண்ணனுக்கு மிகுதியாக இருந்தது. சௌலப்யம் என்பது இறைவனின் எளிமை நிலையைக் குறிப்பது. உலக மாயைக்குக் கட்டுண்ணாத திருமால் மனித வடிவில் வந்து தன் உடலை மக்களின் கண்களுக்கு இலக்காக்கிய நிலையே எளிமைக்கு எடுத்துக்காட்டாகும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
புதன் தலமான திருவெண்காடு பதிகத்தை தினமும் படியுங்கள்; ஓதுவார் பண்ணுடன் பாடுவதைக் ... மேலும்
 
தேரோட்டத்தில் முருகப்பெருமான் ஏறி அருள்புரிவதை தரிசிக்க ஏற்றம் ... மேலும்
 
கட்டாயமில்லை. அமாவாசையன்று சாத்தினால் ... மேலும்
 
கட்டாயம். எங்கு வசித்தாலும் வாசல் ... மேலும்
 
நல்லது. பிரச்னையில் இருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar