பதிவு செய்த நாள்
13
பிப்
2016
02:02
கும்பகோணம், கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமக பெருவிழா கொடியேற்ற நிகழ்வுக்கு பிறகு, பக்தர்கள பொதுமக்கள் ஆகியோர் புனித நீராட்டத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமக விழாவையொட்டி 6 சைவ கோயிலான ஆதிகும்பேஸ்வரர், நாகேஸ்வரர், காசி விஸ்வநாதர், சோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், அபிமுகேஸ்வரர் ஆகிய திருக்கோயில்களில் மதியம் 12 மணிக்கு மேல் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி, கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. கும்பேஸ்வரர் கோயிலில் கொடியேற்றத்தின் போது, தருமபுரம் ஆதீனம் ஆதீனம் கலந்து கொண்டு புனித நீராடினர். இதேபோல் காசிவிஸ்வநாதர் கோயிலில் ஜெயேந்திரர் கலந்து கொண்டார். பின்னர், அங்கிருந்து மகாமக குளத்திற்கு சென்று புனித நீராடினார். இக்கோயிலில் அருள்பாலிக்கும் நவ கன்னியர்களுக்கு சிறப்பு அபிேஷகம் நடைபெற்றது. அதன்பின், மயிலாடுதுறை சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் மகாமக குளத்தில் , 101 சிவாச்சாரியார்கள் வேதம் ஓதி, ஆதிகும்பேஸ்வரர் உற்சவருக்கு உலக நன்மை வேண்டி மகா சங்கல்பம் செய்து கங்கை பூஜை நடைபெற்றது.