Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: விருந்தீஸ்வரர்
  தல விருட்சம்: முருங்கை
  ஊர்: வடமதுரை
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  மார்கழியில் ஆருத்ரா தரிசனம், தைப்பூசம், சிவராத்திரி, பங்குனி உத்திரம் விசேஷ நாட்கள் ஆகும்.  
     
 தல சிறப்பு:
     
  ஈசன் சுயம்பு மூர்த்தியாக திகழ்கிறார்.பங்குனி மாதம் 17ம்தேதியில் சூரியன் விருந்தீஸ்வரர் மீது தன் ஒளிக்கதிர்களை வீசி வழிபாடு செய்கிறார். இங்கு தலவிருட்சமாக வன முருங்கை உள்ளது. சாதாரணமாக எல்லா சிவாலயங்களிலும் நடராஜர் ஜடாமுடி விரிந்து கிடக்க நடனமாடுவார். ஆனால், இங்கு தலை முடித்து அருள்பாலிக்கிறார். சிவன் தனது வாகனமான நந்திக்கு இத்தலத்தில்தான் சர்வ அதிகாரம் தந்தார். இதையடுத்தே கோயில்களில் "அதிகார நந்தி' சன்னதி அமைக்கும் பழக்கம் ஏற்பட்டதாகச் சொல்கின்றனர்.  
     
திறக்கும் நேரம்:
    
 7 மணி முதல் 12 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 
   
முகவரி:
   
  அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோயில், வடமதுரை- 641017. கோயம்புத்தூர் மாவட்டம்.  
   
போன்:
   
  +91- 94428 44884 . 
    
 பொது தகவல்:
     
 

மிகவும் பழமையான இத்தலம் கணேஸ்வரம், அகஸ்திய நல்லூர், கந்தமாபுரி என மூன்று யுகங்களிலும் அழைக்கப் பட்டது. கோயிலில் உள்ள கல்வெட்டின் படி ஏழாம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழன் காலத்தில் நிறுவப்பட்டது என தெரிகிறது.



 
     
 
பிரார்த்தனை
    
 

பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர இங்கு வழிபாடு செய்யலாம்.



 
    
நேர்த்திக்கடன்:
    
  தம்பதியர் ஒன்று சேர்ந்த பின் லட்சுமி நாராயணருக்கு துளசியால் அர்ச்சனை செய்கின்றனர். 
    
 தலபெருமை:
     
 

அதிகார நந்தியை பிரதோஷ காலங்களில் குளிர்ச்சியான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்தால் அவரும் குளிர்ந்து, நமக்கு வேண்டியதை கொடுத்து நம்மையும் குளிர்விப்பார்.


தம்பதி சமேதராக அருள்பாலிக்கும் லட்சுமி நாராயணரை இத்தலத்தில் உள்ளனர். இவர்களை வழிபட்டால் தம்பதியரிடையே மன ஒற்றுமை மேலோங்கும்.
 
     
  தல வரலாறு:
     
  நால்வரில் ஒருவரான சுந்தரர் சிவாயலங்கள் தோறும் சென்று வழிபட்டு வந்தார். அவினாசியில் அவினாசி லிங்கேஸ்வரையும் அன்னை கருணாம்பிகையையும் தரிசித்து விட்டு, விருந்தீஸ்வரர் கோயிலுக்கு வரும்போது மிகுந்த பசி ஏற்பட்டது. தள்ளாடிபடியே கோயிலை அடைந்தார். அவரது நிலை கண்ட ஒரு தம்பதியர் அவரை உபசரித்தனர். கணவன், விசிறி விட, மனைவி வன முருங்கைக்கீரையுடன் அமுது தயாரித்து அளித்தாள். அமுதை சாப்பிட்டவுடன் சுந்தரருக்கு புத்தொளி பிறந்தது.

இந்த புத்தொளிக்கு காரணம் அமுது படைத்த வேடுவராக வந்த இறைவனும், இறைவியுமே காரணம் என்பதை அறிந்தார் சுந்தரர் நெகிழ்ந்து போனார். சுந்தரருக்கு விருந்து படைத்ததால் இத்தல இறைவன் "விருந்தீஸ்வரர்' ஆனார்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: ஈசன் சுயம்பு மூர்த்தியாக திகழ்கிறார்.பங்குனி மாதம் 17ம்தேதியில் சூரியன் விருந்தீஸ்வரர் மீது தன் ஒளிக்கதிர்களை வீசி வழிபாடு செய்கிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar