சிறப்பு மலர் · பகுதி 2 · பக்கம் 35 · 57 / 159
சியாமளா தேவி
சிவனடியார்கள் வெண்ணிற சாம்பல் பூசி, வெண்ணிற ஆடையே அணிந்திருப்பார்கள். இத்தலத்தில் மீனாட்சியும், சிவபக்தையாக இருப்பதால், சாயரட்சை (மாலை) பூஜையின்போது வெண்ணிற ஆடை அணிந்து கொள்கிறாள். இவள் வெண்ணீறு பூசிய மேனியுடையவளாக இருப்பதால், ‘சியாமளா’ என்ற பெயரும் உண்டு. சியாமளம் என்றால் ‘சாம்பல் நிறம்’ என்று பொருள்.