கோயிலுக்குள் செல்பேசி தடை — தெரிந்துகொள்ள வேண்டியவை
செப்டம்பர் 1 முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்பட 52 கோயில்களில் கேமரா செல்பேசிகளுக்குத் தடை.
விதி என்ன
கேமரா வசதி கொண்ட செல்பேசிகளைக் கோயில் வளாகத்துக்குள் எடுத்துச் செல்ல முடியாது. இந்த உத்தரவு செப்டம்பர் 1 முதல் அமலில் உள்ளது.
விளம்பரம்
செல்பேசியை எங்கே வைப்பது
கோயில் வாயில்களில் செல்பேசி வைப்பு மையங்கள் இயங்குகின்றன. ரூ.5 கட்டணம்; ரசீது வழங்கப்படும். வெளியே வரும்போது ரசீதைக் காட்டி பெற்றுக்கொள்ளலாம்.
கும்பாபிஷேக நாள்களில் வழக்கத்தை விட அதிக நேரம் காத்திருக்க நேரலாம். முன்கூட்டியே செல்வது நல்லது.
விளம்பரம்
இதனால் என்ன மாறுகிறது
கும்பாபிஷேக நாளன்று கோயிலுக்குள் செல்பவர்களால் புகைப்படம் எடுக்க முடியாது. வெளியே அமைக்கப்படும் LED திரைகள் வழியாகவும், நேரலைப் பக்கம் வழியாகவும் நிகழ்வைப் பார்க்கலாம்.
