மீனாட்சி அம்மன் கோயில்

சிறப்பு மலர் · பகுதி 2 · பக்கம் 37 · 61 / 159

மதுரையும் காவல் தெய்வமும்

நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு காவல் தெய்வங்களுக்கு உண்டு. கிராமம், ஊர், நகரின் எல்லைகளில் காவல் தெய்வத்தை பிரதிஷ்டை செய்து வழிபடும் மரபு காலந்தோறும் உள்ளது. அந்த வகையில் மதுரையை ஆண்ட குலசேகர பாண்டியன் கடம்பவனத்தை அழித்து நகரையும், தனக்கென ஒரு அரண்மனையும் உருவாக்கினான். மதுரைக்கு அவனால் நிறுவப்பெற்ற காவல் தெய்வங்கள் இதோ...

கிழக்கு – ஐயனார்
தெற்கு – சப்த மாதர்
மேற்கு – திருமால்
வடக்கு – பத்திரகாளி

விளம்பரம்
மேலே
விளம்பரம்