அன்னை மீனாட்சி கும்பாபிஷேகம் பார்க்க வந்த சுப்ரமணியசுவாமி Meenakshi Temple| Madurai temple| lord Sub
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது. நிகழ்ச்சியை காண திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி தெய்வானையுடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தங்க பல்லாக்கில் புறப்பட்டார். வழிநெடுகிலும் பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். மீனாட்சி அம்மன் கோவில் வந்த சுப்ரமணியசாமி தெய்வானை உடன் கிழக்கு சன்னதி வாசல் வழியாக கோவிலுக்குள் சென்றார்.