* எவ்வளவு தடைகள் குறுக்கிட்டாலும் லட்சியத்தை விட்டு விலகாதே. அக்கறையுடன் முன்னேறு. * நல்லவனாக இருந்தால் மட்டும் போதும்! வேறு எதுவும் செய்யத் தேவையில்லை. எல்லாம் நல்லதாக அமையும். * பூக்கள் ஒவ்வொன்றும், கடவுளின் பெருமையை புகழ்ந்தபடி காற்றில் அசைந்தாடுகின்றன. * கடவுள் உணர்வு ஒன்றே மேலான உதவி. அவர் மீது அன்பு செலுத்துவதே மகிழ்ச்சி. * பணியில் தயக்கமோ, பயமோ வேண்டாம். ஆர்வமுடன் செயலாற்று. * எப்போதும் அமைதியாக இருக்க கற்றுக் கொள். பேசாமல் இருப்பதன் மூலம் வேண்டாத பிரச்னை உன்னை நெருங்காது. * தினமும் காலையில் உடற்பயிற்சியில் ஈடுபடு. * எந்தப் பணியில் ஈடுபட்டாலும் கடவுளுக்குரிய காணிக்கையாக கருதுங்கள். * வேலையும் ஒரு வழிபாடு தான். கடவுள் விரும்பும் பிரார்த்தனை இதுவே. * காலத்தை வீணாக்குவது கூடாது. உடனடியாக நல்ல பணிகளில் ஈடுபடு. * சாப்பிட அமர்ந்ததும் சத்தான உணவு மூலம் வலிமை கிடைக்க பிரார்த்தனை செய். -உற்சாகமூட்டுகிறார் ஸ்ரீ அன்னை