Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முன்னேறு மேலே! மேலே! பூஜைக்காக எந்தபூச் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
புகழ் என்றும் அழியாது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2019
03:11

""உலகத்தில் பிறந்தேன். பள்ளிப்படிப்பை முடித்தேன். அரசுத் தேர்வில் அதிக  மதிப்பெண் பெற்றேன். மேலும் படித்து  இன்ஜினியர் ஆனேன். தொழிற்சாலை  துவங்கினேன். மனைவி, மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். என் பணத்தில்  பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒரு வீடு, கார் வாங்கினேன். சர்வதேச நாடுகள் என்னை  அழைத்தன. என் சாதனையைப் பாராட்டி விருதுகள் அளித்து கவுரவித்தனர். நான்  ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் தான் தங்குகிறேன். விமானங்களில் பறக்கிறேன்.  என் வாழ்வு அர்த்தமுள்ளதாக இருக்கிறது”  இப்படி ஒருவர் பெருமைப்படுகிறாரா? நிச்சயமாக நீங்கள் சாதனையாளர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் உங்களிடம்  உள்ள பணத்தால் சமுதாயத்திற்கு பலன் கிடைத்துள்ளதா? என உங்களை  நீங்களே கேட்டுப் பாருங்கள்.

ஜோனாஸ்சால்க் என்னும் விஞ்ஞானி ஒருவர் இருந்தார். அமெரிக்க அரசு  அவருக்கு பல விருதுகள் வழங்கி கவுரவித்தது.  புளு காய்ச்சல் பரவிய காலத்தில்  மருந்து கண்டுபிடிக்கும் வேலை இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. வெற்றிகரமாக  செய்து முடித்து பரிசுகளைப் பெற்றார்.

ஆனால் ஜோனாசின் மனதில் திருப்தியில்லை. ""இந்த உலகத்தில் எத்தனையோ  பேர் உடல்குறையால் நடக்க திண்டாடுகின்றனர். போலியோவை ஒழிக்க  முடிந்ததைச் செய்ய வேண்டும். சிறுவயதிலேயே அதை தடுக்க வேண்டும் ” என  தன் குழுவினருடன் ஆலோசித்தார். அவர்களுடன் இணைந்து வெற்றிகரமாக  மருந்தும் கண்டு பிடித்தார். இன்றும் உலகம் அவரை நன்றியுடன் பாராட்டி  வணங்குகிறது. சொந்த சாதனைக்காக விருது பெறுவதை விட, உலகத்திற்கு உதவ உங்களின்  கல்வியும், அறிவும் பயன்படட்டும். இன்று போலியோ மருந்தால் பல குழந்தைகள்  நிமிர்ந்து நடக்கிறார்கள். ""நீதிமானோ பிசினித்தனம்(கஞ்சத்தனம்) இல்லாமல்  கொடுப்பான்” என்ற வசனத்தை நினைவில் கொள்ளுங்கள்.  உங்களிடம் உள்ள  பணம், கல்வி, திறமையை கஞ்சத்தனம் இன்றி உலகிற்கு வழங்குங்கள். நீங்கள்  ஒருநாள் அழியலாம்; ஆனால் புகழ் என்றும் அழியாது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar