* மர நிழலில் ஓய்வு பெறும் பயணி போல உலக வாழ்வு சில காலமே. * உப்பை நீர் கரைப்பது போல நற்குணம் பாவத்தை கரைத்து விடும். * புகழுக்கு அடிமையாகாத செல்வந்தரை இறைவன் நேசிக்கிறான். * இறைவன் நேசிக்கும் விதத்தில் மலர்ந்த முகத்துடன் இருப்பீராக! * எப்போதும் இறைவன் செய்த உதவியை சிந்தனை செய்வீராக! * அநாதை பிள்ளைகளை அன்புடன் நல்ல விதமாக நடத்துங்கள். – பொன்மொழிகள்