பதிவு செய்த நாள்
26
நவ
2019
02:11
ஸ்லோகம்
அஹிம்ஸா ஸத்யம க்ரோதஸ்
த்யாக: ஸாந்திரபை ஸுநம்!
தயா பூதேஷ்வலோ லுப்த்வம்
மார்தவம் ஹ்ரீரசாபலம்!!
தேஜ: க்ஷமா த்ருதி: ஸௌசம்
அத்ரோஹோ நாதிமாநிதா!
பவந்தி ஸம்பதம் தைவீம்
அபிஜாதஸ்ய பாரத!!
பொருள்: தீங்கு செய்யாமை, மனம் அறிந்த உண்மையை இனிமையாக எடுத்துரைத்தல், தீயவரிடம் கோபம் கொள்ளாமை, அடக்கமுடன் பணி செய்தல், அமைதி காத்தல், ஒருவரையும் குறை பேசாமை, உயிர்களிடம் கருணை, புலன்களில் பற்றின்மை, மென்மை, தர்மத்திற்கு எதிராக செயல்பட வெட்கப்படுதல், வீண் செயல்களை தவிர்த்தல், அழகு, பொறுமை, உறுதி, புறத்தூய்மை, பகையுணர்வு கொள்ளாமை, செருக்கின்றி செயல்படுதல் – இவை எல்லாம் தெய்வீக சம்பத்துடன் பிறந்த நல்லவர்களின் இலக்கணமாகும்.