1926 நவ.23ல் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சாய்பாபா அவதரித்தார். 2011 ஏப்.24ல் ஸித்தியடைந்தார். புட்டபர்த்தியில் உள்ள யஜுர் ஆஸ்ரமத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
* பொறுமை மிக்கவர் வாழ்வில் ஏற்றம், இறக்கம் ஏற்பட்டாலும் அவர்களின் முகம் எப்போதும் மலர்ச்சியுடன் இருக்கும். அதுவே வாழ்வின் இன்பமாகும். * வெறுப்பு, பயம் இருக்குமிடத்தில் கூச்சல் இருக்கும். ஆணவம் உள்ள இடத்தில் தற்பெருமை இருக்கும். அன்பு இருக்குமிடத்தில் அமைதி இருக்கும். * கருணையுள்ளவர்கள் மட்டுமே பிறர் மீது அன்பு செலுத்துவர். சாதிக்க முடியாததையும் பொறுமை சாதிக்கும். * பிறர் பாராட்டும் போது பெருமிதமோ, திட்டும் போது வருத்தமோ கொள்ளாதீர்கள். * பக்தியில் ஈடுபடும் போது தான் சமுதாயம் முழுமை பெறும். * இளமைக்காலம் என்பது முக்கிய காலகட்டம். அதை நல்வழிப்படுத்துவதில் பெரும் பங்கு, பெற்றோரைச் சேரும். * ஓய்வு நேரத்தை தியானம் செய்யவும், சேவை செய்யவும் பயன்படுத்துங்கள். * எதிர்பார்ப்பும், பேராசையும் பெருந்துன்பம் தரும். * செய்யும் நற்செயல், தீயசெயல்களுக்கான பலன் எதிர்காலத்தில் நம்மை வந்தடையும். * உடலுக்கு உணவு சக்தி தருவது போல தனிமனித அமைதியே உலகிற்கு சக்தி தருகிறது. * உயிர்களின் பசிப்பிணியை போக்குவது நம் கடமை. * மனிதநேயம் கொண்டவர் மனதில் எப்போதும் மகிழ்ச்சி குடியிருக்கும். * மனிதராகப் பிறந்ததே பக்தியின் மூலம் கடவுளை அடையத் தான். * சேவை மூலம் அன்பு வெளிப்படுவதோடு அது எங்கும் பரவுகிறது. - சொல்கிறார் சாய்பாபா