பதிவு செய்த நாள்
29
நவ
2019
01:11
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே, ஐயப்பன் சுவாமி கோவிலின், முதலாமாண்டை முன்னிட்டு, அஷ்டபந்தன விழா நடந்தது. பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ராமியணஹள்ளியில், ஐயப்ப சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் முதலாமாண்டு, அஷ்டபந்தன விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, அதிகாலை, 4:00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன், சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், தேன் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. காலை, 6:00 மணிக்கு, ஐயப்பன் சுவாமிக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஐயப்பன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து, சபரிமலைக்கு மாலை அணிந்தனர். விழாவில், பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.