திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோவிலில் பிரம்மோத்சவம் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2026 11:03
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி உத்சவத்துடன் விழா நி றைவு பெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகா, திருமால்பூர் கிராமத் தில், ஹிந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில், மணிகண்டீஸ்வரர் கோவில் உள்ளது. நடப்பாண்டு மாசி மாத பிரம்மோத்சவம், பிப்., 21ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதே மாதம், 27ல் தேரோட்டம் நடந்தது. பிரம்மோத்சவத்தின் இறுதி நாளான நேற்றுமுன்தினம் 108 கலசாபிஷேகம், புஷ்ப அலங்காரத்துடன் விடையாற்றி உத்சவம் நடந்தது.