* தேவையிருந்தால் மட்டும் பேசுங்கள். * நன்மை தருவதை மட்டும் பேசுங்கள். * நீதி தவறாமல் பேசுங்கள் * மலர்ந்த முகத்துடன் கண்ணியமாக பேசுங்கள் * மென்மையான வார்த்தைகளை மட்டும் பேசுங்கள். * பிறர் பயப்படும்படி உரக்க பேசாதீர்கள் * தீய பேச்சால் நாக்கை கறை படுத்தாதீர்கள் * பிறருடைய குறைகள் பற்றி பேசாதீர்கள் * உங்கள் நாக்கு கோள் சொல்லக்கூடாது * பிறரை கேலி செய்யும் வகையில் பேசாதீர்கள் * பொய்யான வாக்குறுதிகளை வீசாதீர்கள் * பட்டப்பெயர் வைக்காதீர்கள்
நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் இறைவனால் நியமிக்கப்பட்ட வானவர் ஒருவர் பதிந்து கொள்கிறார். இறப்புக்குப் பின் “இவர் இன்ன வார்த்தையைப் பேசினார்” என இறைவனிடம் வானவர் தெரிவிப்பார். அது நல்லதாக இருந்தால் நாம் பலனடைவோம். மோசமானதும், தேவையற்றதுமாக இருந்தால் இறைவனின் கோபத்திற்கு ஆளாவோம்.