கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் மூலவர் மீது ஒளிக்கதிர்: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2026 02:04
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் நீங்கப்பெற்ற தலமான இக்கோயிலில் ஆண்டுதோறும் தமிழ் மாதமான சித்திரை 11-ம், 12-ம், 13-ம் ஆகிய 3 நாட்கள் சூரியன் தன் ஒளிக்கதிர்களை மூலவர் லிங்கத்தின் மீது படர்வது வழக்கமாகும். நிகழாண்டு, நேற்று முன்தினம் (ஏப்.24) சூரியன் லிங்கத்தின் மீது, காலை 6.15 மணிக்கு சூரியன், தன் ஒளிக்கதிர்களை நாகேஸ்வரன் சன்னதி தெருவில் உள்ள ராஜகோபுரம் மாடத்தின் வழியாக கொடிமரம், நந்தியம் பெருமானைக் கடந்து, மூலவர் நாகேஸ்வரர் மீது படர்ந்தது. இதே போல் நேற்று (ஏப்.25) நடைபெற்றது. நேற்று நடைபெற்ற சூரிய பூஜையில் ஏராளமான பக்தர்கள் திரண்டு வழிபட்டனர். பின்னர், கோயில் பிரகாரத்தில் உள்ள சூரியன் பகவானுக்கு சிறப்புப் பூஜைகள், அபிஷேகங்கள் செய்விக்கப்பட்டது. தொடர்ந்து, இன்று (ஏப்.26) சூரிய பூஜை நடைபெறவுள்ளது.