ஊழல் மிகுந்த அரசியல்வாதிகளின் காலம் இது! ஆனால் அன்றைய நாளில் ஆட்சியாளர்கள் எப்படி இருந்தனர் தெரியுமா? ஆட்சியாளரான அபூபக்கர் இறை அச்சம் மிகுந்தவர். ஆட்சிப்பொறுப்பேற்ற மறுநா ளே தான் செய்த துணி வியாபாரத்தை கவனிக்க புறப்பட்டார். ""அபூபக்கரே! நீங்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டால் ஆட்சியை கவனிப்பது யார்?” எனக்கேட்டார் உமர். ""ஆட்சியில் இருந்தாலும் என் குடும்பத்தை கவனிக்காமல் இருக்க முடியுமா? துணி வியாபாரம் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தான் குடும்பத்தை காப்பாற்ற முடியும்” என்றார் அபூபக்கர். தோழர்களுடன் ஆலோசித்த உமர், அரசு கஜானாவில் இருந்து மாதம் தோறும் குடும்பச் செலவுக்கு பணம் அளிக்கத் தொடங்கினார். ஆனால் அபூபக்கர் தன் இறுதிக்காலத்தில் குடும்பத்திற்காக வாங்கிய தொகையை அரசிடமே திருப்பிச் செலுத்தினார்.