Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நேர்மைக்கான பரிசு நாட்டுப்பற்று அவசியம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உதவிக்கரம் நீட்டுங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 டிச
2019
02:12

வருமானம் அதிகரிக்க, அதிகரிக்க மனிதனுக்கு சுய நலமும் அதிகரிக்கிறது.  வீட்டிற்கு அவசிய மான பொருட்களை வாங்குவதில் தவறில்லை. ஆனால் ஆடம்  பரத்தில் திளைத்து தேவை யற்ற பொருட்களை வாங்குபவர்களே அதிகம்.  போதாக் குறைக்கு பாவத்திற்கு ஆளாக்கும் கொடிய பழக்கங்களும் பணத்தால்  வருகின்றன.   இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான்வெஸ்லி என்ற போதகர் குறைந்த வருமானத்தில்  வாழ்ந்தார். ஆண்டு வருமானம் 30 பவுண்டு தான். இதில் 2 பவுண்டு தர்மச்செலவு  செய்வார். மீதியை சொந்த செலவுக்கு பயன்படுத்துவார். ஒரு கட்டத்தில்  ஆக்ஸ்போர்டு பல்கலையில் பேராசிரியர் பணி கிடைத்தது. ஆண்டு வருமானம்  1600 பவுண்டு. அதன் பின் ஆடம்பரமாகச் செலவழித்தார். அவரது வாழ்க்கை முறையே மாறியது. ஆடம்பரமான வீட்டில் குடியேறினார்.  விலை உயர்ந்த  படங்களால் வரவேற்பு அறையை அலங்கரித்தார்.

அந்த அறையை சுத்தம் செய்ய வேலைக்காரச் சிறுமி  ஒருத்தி வந்தாள்.  அப்போது குளிர்காலம். ஆனால் குளிரைத் தாங்கும் ஆடைகள்  இல்லாததால்  நடுங்கினாள்.  அவளைக் கண்ட ஜான் வெஸ்லி, ""தேவையற்ற செலவுகளால்  பணத்தை வீணடித்தேனே! அதில் இவளுக்கு நாலைந்து கோட் வாங்கி கொடுத்  திருக்கலாமே! இவளைப் போல எத்தனையோ ஏழைகள் குளிரில் நடுங்குவார்களே!  அவர்களுக்கு உதவாமல் போனேனே?” என கண் கலங்கினார்.  தன்னிடத்தில் இருந்த இரக்க உணர்வை, அளவுக்கு அதிகமான பணம் பறித்து  விட்டதை எண்ணி வெட்கப்பட்டார். மனம் திருந்தி தன் வருமானத்தை  தர்மவழியில் செலவழிக்க முடிவு செய்தார். முன்போலவே 28 பவுண்டுக்குள்  சுயதேவைகளை நிறைவேற்றினார். மீதியை ஏழைகளுக்கு கொடுத்தார்.  பணம் வாழ்விற்கு அவசியம் தான். ஆனால் தீமைக்கு இழுத்துச் செல்லும்  அளவுக்கு இருப்பது கூடாது. தேவை போக, மீதிப் பணம் பசியுள்ளவனுக்கு  ஆகாரமாக மாறட்டும். நோயாளிக்கு மருந்தாகட்டும். அனாதை குழந்தைகளுக்கும்,  ஆதரவற்ற பெண்களுக்கும் ஆறுதல் அளிக்கட்டும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar