பணத்தை எப்படி சம்பாதிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
* சுலபமாய் சேர்த்த செல்வம் விரைவில் மறையும். உழைப்பின் மூலம் சேகரிப்பவனோ செல்வத்தைப் பெருக்குகிறான்.
* பொய் சொல்லித் திரட்டும் செல்வமானது, சாகப் போகிறவன் அங்குமிங்கும் புரள்வது போல வீணான ஒன்று.
* செல்வம் என்றுமே நிலையானது அல்ல. கிரீடம் தலைமுறை தலைமுறையாக நிலைத்து வருவதில்லை.
* எரிக்கும் உஷ்ணத்துடன் சூரியன் உக்கிரமாக உதயமானவுடனேயே, புல் பூண்டு மீது பட்டு அது உலர்கிறது. செடியின் பூக்கள் உதிர்ந்து அதன் அழகான வடிவம் அழிகிறது. அது போலவே செல்வந்தனும் தன் போக்குகளினால் அழிந்து போகிறான்.
* பணத்தை நேர்வழியில் சம்பாதிக்க வேண்டும். தேவை போக மிஞ்சியதை பிறருக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.
இப்படி செய்தால் தான் சேர்த்த பணத்திற்கு பெருமை சேரும்.