திருநள்ளார் கோவிலில் சூரிய கிரகணத்தில் நடைதிறந்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2019 04:12
காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வரபகவான் கோவிலில் சூரியகிரகணத்தை முன்னிட்டு வழக்கம்போல் கோவிலில் பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டனர்.
காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார்.இதனால் நாட்டில் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் தினம் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சூரியகிரகணம் என்பதால் பல்வேறு இடங்களில் உள்ள கோவில்கள் நடை மூடப்பட்டுள்ளது. ஆனால் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் காலை முதல் வழக்கம்போல் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் சூரிய கிரகணம் என்பதால் திருநள்ளாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் குறைவாக காணப்பட்டது. இதுபோல் காரைக்காலில் முக்கிய கோவில்களில் கிரகணம் என்பதால் பல்வேறு கோவில்களில் நடை மூடப்பட்டிருந்தது.
கோவில் சிவாச்சாரியார் ராஜா சுவாமிநாதர் கூறுகையில்.. திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் பொதுவாக எந்த ஒரு கிரகணம் நாளிலும் கோவில் நடை மூடப்படுவதில்லை. இக்கோவிலில் உள்ள சனீஸ்வர பகவான் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தர்பாரண்யேஸ்வரர் கிரகங்களுக்கெல்லாம்அப்பாற்பட்டவர். கிரகண நேரத்தில் சுவாமிகள் கோவில்களில் வழிபாடு செய்யும்போது பெரும் பலனை தரும். கிரகண நேரம் என்பது புண்ணிய காலமாகும் இந்த நேரத்தில் திருநள்ளார் கோவிலில் உள்ள அனைத்து வழிபாடு தளங்களில் பெரும் பலனை தரும் இதனால் கிரகணம் நேரங்களில் கோவில் நடை மூடுவதில்லை வழக்கம்போல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர் என்று கூறினார்.