பரமக்குடி: பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் தர்மசாஸ்தா- புஷ்கலாதேவி திருக்கல்யாணம் நடந்தது.கேரளா ஆரியங்காவு ஐயப்ப சுவாமி கோயிலில் நடப்பது போன்று, ஒவ்வொரு ஆண்டும் பரமக்குடி தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் திருக்கல்யாணம் நடப்பது வழக்கம்.
இதன்படி ஐயப்பசுவாமி கோயிலில் டிச.25 இரவு 7:00 மணிக்கு தர்மசாஸ்தாவுக்கும் - சவுராஷ்ட்ரா குலகன்னி புஷ்கலாதேவிக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.நேற்று சந்திர கிரகணத்தையொட்டி காலையில் நடை அடைக்கப்பட்டது. இதனால்மாலை 4:00 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம், திருமாங்கல்ய ஊர்வலம் மேள, தாளம் முழங்க கோயிலை அடைந்தனர்.பின், பெண் வீட்டார் அழைப்பு, மாலை மாற்றல் நிறைவடைந்து, மாலை 5:00 மணிக்கு மேல் தர்மசாஸ்தா - புஷ்கலாதேவி திருக்கல்யாணம் நடந்தது. அப்போது நலுங்கு சுற்றுதல், விவாஹ சடங்குகள் வேத, மந்திரம் முழங்க சவுராஷ்டிரா திருமண முறைப்படி நடத்தப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.இரவு 8:00 மணிக்கு சுவாமி, தாயாருடன் மணக்கோலத்தில் பட்டண பிரவேசம் வந்தார். ஏற்பாடுகளை தர்மசாஸ்தா சேவா சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர். இன்று காலை மண்டல பூஜை, 108 சங்காபிஷேகம், திருவிளக்கு வழிபாடு நடக்கிறது.