திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருவாதிரை திருவிழா ஜன.,1ல் மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டுடன் துவங்குகிறது. இக்கோயிலில் அன்றிரவு 7:00 மணிக்கு மூலவர் சத்தியகிரீஸ்வரருக்கு சிறப்பு பூஜை முடிந்து திருமுறை பாடப்படும். மாணிக்கவாசகர் பல்லக்கில் கோயில் திருவாட்சி மண்டபத்தை மூன்று முறை வலம் வந்து எழுந்தருளுவார். அவருக்கு காப்பு கட்டப்பட்டு திருவெண்பாவை 21 பாடல்கள் பாடப்படும்.இந்நிகழ்ச்சி ஜன.,8 வரை நடக்கும். ஜன.,9 காலை மாணிக்கவாசகர் சப்பரத்தில் கிரிவலம் செல்வார். இரவு கோயிலுக்குள் கண்ணுாஞ்சல் முடிந்து சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாள், வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி, கோயில் முன்பு சிறிய ராட்டினத்தில் எழுந்தருளி ராட்டின திருவிழாவும், ஜன.,10ல் ஆருத்ரா தரிசன விழாவும் நடக்கும்.