புதுச்சேரி; தருமாபுரி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.புதுச்சேரி, முத்தரையர்பாளையம் அடுத்த தருமாபுரியில் ஆபத்சகாய ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, சுவாமிக்கு நேற்று காலை பால் அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.