உத்தரகோசமங்கையில் சூரிய கிரகணத்தில் பரிகார பூஜைகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27டிச 2019 12:12
உத்தரகோசமங்கை: -உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் பழமையும் புரதான சிறப்பும் பெற்றது.
சூரிய கிரகணத்தை முன்னிட்டு நேற்று காலை 6:30 முதல் 11:30 மணி வரை கோயில் நடை அடைக்கப்பட்டது. கிரகணம் மறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின் பரிகார பூஜைகள் நிறைவேற்றப்பட்டது. 11:45 மணிக்கு மேல் உச்சிக்கால பூஜையில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயிலிலும் சூரிய கிரகணத்தை முன்னிட்டு நடை அடைக்கப்பட்டது. பரிகார பூஜைகள், புனித நீர் தெளிக்கப்பட்ட பின் மீண்டும் முற்பகல் நடை திறக்கப்பட்டது.