திருக்கனுார்: திருவக்கரை வக்ரகாளியம்மன் வழிபாடு நற்பணி மன்றம் சார்பில், 19ம் ஆண்டு 1008 பால்குட ஊர்வலம் நேற்று நடந்தது. திருக்கனுார் முத்து மாரியம்மன் கோவில் வளாகத்தில், காலை 7:30 மணிக்கு, பால்குட ஊர்வலத்தை செல்வம் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். மாலை அணிந்து விரதம் இருந்த பக்தர்கள், 1008 பால்குடங்களுடன் புறப்பட்டு, சித்தலம்பட்டு, புதுக்குப்பம், கொடுக்கூர் வழியாக திருவக்கரைக்கு சென்று, வக்ரகாளியம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வக்ரகாளியம்மன் வழிபாடு நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.