பதிவு செய்த நாள்
28
டிச
2019
12:12
போடி:- போடி ஐயப்பன் கோயிலில் மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.
இக்கோயிலில் மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள், போடி திருவாசக குழு வினர் பஜனையுடன் இரட்டை வாய்க்கால் விநாயகர் கோயிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து நகர் வலம் வந்தனர்.
ஐயப்பனுக்கு சோடாபிஷேகம், தீபாராதனை பக்தசபை தலைவர் முனியாண்டி தலைமையில் நடந்தது. சபை குருநாதர் மகாலிங்கம், செயலாளர் விவேகானந்தன், பொருளாளர் ஆறுமுகம், அகில பாரத அய்யப்ப சேவா சங்க பொருளாளர் முருகன், துணை செயலாளர் மாரிமுத்து, இணை செயலாளர் முருகேசன், கவுரவ ஆலோசகர் சோமஸ்கந்த குருக்கள் முன்னிலை வகித்தனர்.
ஏராளமான பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டனர். சிறப்பு அலங்காரத்தில் ஐயப்பன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி அலங்காரத்தை அர்ச்சகர் கமலகண்ணன் செய்திருந்தார்.
தேவதானப்பட்டி: ஜெயமங்கலம் ஐயப்ப சேவா சங்கம் சார்பில், ஐயப்பன் கோயிலில் விளக்கு பூஜை நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானமும் வழங்கப்பட்டது.
சக்தி, யாழி பூஜை தேவாரம்:,தேவாரம் ஐயப்பன் கோயில் 63வது சக்தி, யாழி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தேவாரம் ஜமின்தார் சிவராஜ பாண்டியன் தலைமை வகித்தார். ஜமின்தார் சிவதணிராஜா முன்னிலை வகித்தார். நேற்று முன்தினம் 26ம் தேதி மாலை 7:00 மணிக்கு மணி மண்டபத் திலிந்து ஐயப்பன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அரங்கநாதர் கோயில் எதிரே அமைக்கப் ட்டுள்ள ஆசிரமத்தில் எழுந்தருளினார். நேற்று 27ம் தேதி மாலை 4:30 மணிக்கு கரகம், 7 கன்னிமார் நெய் கொப்பரை சுமந்து வர சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரவு 9:30 மணிக்கு சுவாமி நகர்வலம் நடந்தது.
ஏற்பாடுகளை மணி மண்டப நிர்வாகிகள் நாராயணன், மணிகண்டன் மற்றும் ஐயப்ப பக்தர் கள் செய்திருந்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று 28ம் தேதி அதிகாலை 5:00 மணி முதல் யாழியில் பூக்குழி இறங்குதல் நடைபெறும்.