Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏழுமலையான் தரிசனம்: பக்தர்களுக்கு ... பகல்பத்து உற்சவம்: வாமன அவதார காட்சியளித்த நம்பெருமாள் பகல்பத்து உற்சவம்: வாமன அவதார ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் திருப்படி திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜன
2020
10:01

திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த திருப்படித் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.

Default Image
Next News

திருத்தணி முருகன் கோவிலில், திருப்படித் திருவிழாவையொட்டி, காலை, 7:45 மணிக்கு, சரவண பொய்கை அருகில் உள்ள மலையடிவாரத்தில், கோவில் இணை ஆணையர் பழனிகுமார், திருத்தணி எம்.எல்.ஏ., நரசிம்மன், ஆவின் சேர்மன் சந்திரன் ஆகியோர் முதல் பஜனை குழுவினரை வரவேற்றும், முதல்படியில் பூஜை செய்தும், படித் திருவிழாவை துவக்கி வைத்தனர்.365 படிகள்பின் கோவில் ஊழியர்கள், 365 படிகளிலும், கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து மலைக்கோவிலுக்கு சென்றனர். தொடர்ந்து, பெங்களூரு, சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நுாற்றுக் கணக்கான பஜனை கோஷ்டியினர், ஒவ்வொரு படியிலும், பக்தி பாடல்கள் பாடியவாறு மலைக்கோவிலுக்கு சென்று மூலவரை வழிபட்டனர்.மேலும், படித் திருவிழாவையொட்டி, திரளான பெண் பக்தர்கள் ஒவ்வொரு படியில் மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, கற்பூரம் ஏற்றி மலைக்கோவிலுக்கு சென்று முருகப் பெருமானை தரிசித்தனர்.

வெள்ளி மயில் வாகனம்தொடர்ந்து, காலை, 11:00 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.முன்னதாக, அதிகாலை, 4:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மேலும், வள்ளிமலை சுவாமி சச்சிதானந்தா திருப்புகழ் சபா குழுவின், 102வது படித் திருவிழாவையொட்டி, நகரத்தார் மண்டபத்தில் அன்னதானம் மற்றும் பக்தி கச்சேரி நடந்தது. நள்ளிரவு, 12:01க்கு மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பல மணி நேரம் காத்திருந்து மூலவரை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; ஐப்பசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத அம்மாவாசை தீர்த்தவாரி ... மேலும்
 
temple news
கோவை; மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்திருமலை ஸ்ரீ வாரி ஆலயத்தில் நடந்த வைபவத்தில் அதிகாலையில் ... மேலும்
 
temple news
சிவகங்கை; மா‌னாமதுரை வட்டம் கட்டிக்குளம், ஸ்ரீ சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள் கோயிலில் அமாவாசையை ... மேலும்
 
temple news
கோவை; கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு ஏராளமான மக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar