Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அரங்கநாதர் கோவில் சொர்க்கவாசல் ... அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹெத்தையம்மன் திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜன
2020
11:01

லகிரி மாவட்டத்தில் வாழும் படுக்கை சமுதாய மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா நேற்று துவங்கியது.ஒரு மாதத்திற்கு முன்பு சக்கலாத்தி என்ற பண்டிகை முதல் விரதம் இருந்து வரும் பக்தர்கள், நேற்று காலை மடிமனை அக்கமணி கோவிலுக்கு, வண்ண குடைகளின் கீழ் அம்மனுக்கு உரித்தான செங்கோல் எடுத்து, பாரம்பரிய உடையுடன் ஊர்வலமாக சென்றனர்.பஜனை, ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. கிராம கோவிலில் இருந்து, மடிமனைக்கு செல்லும் பக்தர்கள், வீட்டிற்கு திரும்பாமல், ஒரு வாரம் அங்கேயே விரதம் மேற்கொள்கின்றனர்.அங்கு, நாள்தோறும் இரவு கத்திகை எனப்படும் அருள்வாக்கு நிகழ்ச்சி நடக்கிறது. இவ்விழாவின் ஒரு கட்டமாக, கோத்தகிரி அருகே உள்ள கேர்பெட்டா ஹெத்தையம்மன் சுத்தக்கல் பகுதியில், திருவிழா கோலாகலமாக நடந்தது.பழமை வாய்ந்த பேரகணி ஹெத்தையம்மன் செங்கோல் பக்தர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அருள்வாக்கு நிகழ்ச்சியுடன், அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மடிமனையில் நாளை (8ம் தேதி) விழா நடக்கிறது. உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், அதிக அளவில் பக்தர்கள் பங்கேற்கின்றனர். வரும் வெள்ளிக்கிழமை இருப்புகல் மடிமனையிலும், சனிக்கிழமை ஒன்னதலை மடிமனையிலும் விழா நடக்கிறது. அங்கு அருள்வாக்கு அன்னதானம் நிகழ்ச்சி நடக்கிறது.முக்கிய திருவிழா நாளான, 12ம் தேதி ஹெத்தையம்மன் கோவில் அமைந்துள்ள பேரகணி, பெத்தளா, ஒன்னதலை, கூக்கல், சின்னகுன்னூர், எப்பநாடு மற்றும் பெப்பேன் ஆகிய கிராமங்களில், திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. விழாவை ஒட்டி, படுக சமுதாய மக்கள் வசிக்கும் கிராமங்கள், விழாக்கோலம் பூண்டுள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் கோயிலில் வெளிஆண்டாள் சந்நிதி உள்ளது. இங்கு ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருமங்கலம்; கள்ளிக்குடி தாலுகா செங்கப்படை கோயிலில் 68 ஆண்டுகளாக அணையாமல் தொடர்ந்து விளக்கு ... மேலும்
 
temple news
அன்னுார்; குன்னியூர், கருப்பராயன் சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. அன்னுார், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar