Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதியோகி ரதத்திற்கு செஞ்சியில் ... விருதுநகர் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விருதுநகர் கோயில்களில் வைகுண்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

பதிவு செய்த நாள்

07 ஜன
2020
12:01

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நேற்று காலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

108 வைணவ தலங்களில் ஒன்றான இங்கு நேற்று அதிகாலை 3:30 மணியளவில் கோயிலில், பெரிய பெருமாள் மற்றும் ஆண்டாள், ரெங்கமன்னார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டனர். காலை 6:15 மணியளவில் சொர்க்கவாசல் மண்டபத்திற்கு ஆழ்வார்கள் எழுந்தருளினர். 6:24 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, முதலில் பெரியபெருமாளும், தொடர்ந்து ஆண்டாள், ரெங்கமன்னார் தம்பதி சமேதராக எழுந்தருளினர்.

ஆழ்வார்கள் எதிர்கொண்டு அழைத்து மாடவீதிகள் வழியாக ராப்பத்து மண்டபம் எழுந்தருளினர்.அங்கு ஆழ்வார்கள் மங்களாசாசனம், திருவாய்மொழி துவக்கம், அரையர் அருளிப்பாடு, பத்தி உலாவுதல், அரையர் வியாக்யானம், சேவாகாலம், தீர்த்தகோஷ்டி நடந்தது. மாலை 3:30 மணியளவில் ஆண்டாள், ரெங்கமன்னார் ஆஸ்தானம் வந்தடைந்தனர். விழாவில் சடகோபராமானுஜ ஜீயர், டி.ஐ.ஜி., ஆனிவிஜயா, தக்கார் ரவிசந்திரன், அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால், செயல் அலுவலர் இளங்கோ பங்கேற்றனர். டி.எஸ்.பி., ராஜேந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ராப்பத்து உற்ஸவம் துவக்கம் நேற்று முதல் ஜன.16 வரை ராப்பத்து உற்ஸவம் நடக்கிறது. தினமும் இரவு 7:00 மணிக்கு ஆண்டாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, மாடவீதி வழியாக பெரியபெருமாள் சன்னதி வந்தடைகிறார். அங்கு திருமஞ்சனம், கைத்தலசேவை, அரையர் வியாக்யானம், பஞ்சாங்கம் வாசித்தல் நடக்கிறது. அதிகாலை 5:30 மணிக்கு ஆண்டாள் மூலஸ்தானம் வந்தடைவார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar