Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீரப்பன்சத்திரம் மாரியம்மன் ... பாரியூரில் தீ மிதி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எட்டு கரங்களுடன் காட்சியளிக்கும் பாரியூர் கொண்டத்து காளியம்மன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2020
11:01

நீராலும் பசுமை நிறைந்த வயல்களாலும் சூழப்பட்ட மையப்பகுதியில், குடிகொண்டுள்ள கொண்டத்து காளியம்மனை, பாரியூர் அம்மன் என்றே பக்தர்கள் அழைக்கின்றனர்.
மகிஷாசுரனை வதம் செய்து, அமைதியாகி, சாந்தரூபமாக, பாரியூரில் கொண்டத்து காளியம்மன் காட்சி தருகிறாள். அம்பாளின் முகம் சிரித்த முகம், பக்தர்கள் வேண்டுவதை வரமாக அள்ளித்தரும் வல்லமை கொண்டாக திகழ்கிறது. வலது காலை மடித்து, இடக்காலை தொங்க விட்டிருக்கிறாள். மகிஷாசுரனின் தலையை, அம்மனின் இடது கால் பூமியில் அழுத்தியிருக்கிறது. தேவியின் வலக்கை ஏந்தியிருக்கும் சூலாயுதம், அவனது மார்பை துளைக்கிறது. அஷ்டகரம் உடையவளாய், தலையில் அக்னி கிரீடத்துடன் அன்னை அருள்பாலிக்கிறாள். அன்னையின் எட்டு கரங்களிலும், எட்டுவித பொருட்கள் குடி கொண்டுள்ளன. வலப்புற நான்கு கரங்களில், மேலிருந்து கீழாக, சூலாயுதம், டமாரம், கத்தி, கிளி வடிவில் வேதாளம் ஆகியவற்றை கொண்டிருக்கின்றன. இடப்புற நான்கு கரங்களில், மேலிருந்து கீழாக அக்னிசட்டி, கேடயம், மணி, கபாலம் உள்ளது. அன்னையின் திருவுருவத்தை அப்படியே வர்ணிக்கும் ஸ்லோகம் உள்ளது. ஜூவாலையை தலையில் ஏந்தி, சிவப்பு நிற ஆடை அணிந்து, எட்டு கரங்களிலும், எட்டு விதமான பொருட்களையும் கொண்ட சாமுண்டீஸ்வரியே, உனது விஸ்வரூப தரிசனத்தை கண்டு உலகமே நடுங்குகிறது. பத்ரகாளியே உன்னை வணங்குகிறேன் என பொருள்படும்படி, ஸ்லோகம் இயற்றப்பட்டுள்ளது.
விபூதிக்கு பதில் திருநீறு மண்: பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், பக்தர்களுக்கு விபூதியாக திருநீறு மண் வழங்கப்படுகிறது. கோவிலுக்கு சொந்தமான தேர்வீதியில், காலங்காலமாக, திருநீறு மண் எடுக்கப்படுகிறது. இன்று நடக்கும் விழாவில், ?0 ஆயிரம் பக்தர்கள் தீ மிதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தனை பக்தர்களுக்கும் விபூதி வழங்க, தேர்வீதியில் இருந்து ஒன்றரை யூனிட் மண் எடுக்கப்பட்டது. சலித்து சுத்தம் செய்து, உலர வைத்து, ஆகம விதிப்படி, பூஜித்து வைக்கப்பட்டுள்ளது. தீ மிதிக்கும் பக்தர்களுக்கு, திருநீறு மண் வழங்கப்படும்.
தினமும் ஆறு கால பூஜைகள்: பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், தினமும் காலை, 6:00 மணிக்கு விளா பூஜை, 9:00 மணிக்கு சந்தி பூஜை, 10:30 மணிக்கு சிறுகாலை சந்தி பூஜை, மதியம் 12:00 மணிக்கு உச்சிகால பூஜை, 5:00 மணிக்கு மாலை பூஜை, இரவு, 7:00 மணிக்கு அர்த்த சாம பூஜை என ஆறு கால பூஜை நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்; விழுப்புரம் பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் இன்று ஏகாதச ருத்ர ஜெப ஹோம பாராயணம் ... மேலும்
 
temple news
கோவை; சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலை வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு பணிகள் ஆரம்பமாகியுள்ளது. ... மேலும்
 
temple news
மதுரை:“ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பட்டர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,” ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar