Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இளைஞர்களுக்கு தேசபக்தி: ... சதுரகிரியில் செக் குடியரசு பக்தர்கள் தரிசனம் சதுரகிரியில் செக் குடியரசு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கை மரகத நடராஜரை தரிசிக்க குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜன
2020
10:01

உத்தரகோசமங்கை: ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, உத்தரகோசமங்கை மரகத நடராஜர் திருமேனியில் புதிய சந்தனம் பூசி, மலர்களால் அலங்கரிங்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Default Image
Next News

உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி அம்மன், மங்களநாத சுவாமி கோயில், மாணிக்க வாசகரால் பாடல் பெற்ற சிவாலயம். இந்த கோயில் பிரகாரத்தில் தெற்கு நோக்கி அமைந்த சன்னதியில் பச்சை மரகத கல்லால் ஆன நடராஜர் சிலை உள்ளது.ஒலி, ஒளி அதிர்வுகளால் பாதிப்பு ஏற்படாமலிருக்க ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பிட்டு மரகத நடராஜர் காட்சி தருகிறார். ஆருத்ரா தரிசனத்திற்காக ஆண்டிற்கு ஒருமுறை மட்டும் மரகத நடராஜரின் திருமேனில் பூசப்பட்ட சந்தனம் களைதல் நடந்து புதிய சந்தனம் பூசப்படும். அதன்படி நேற்று காலை 9:00 மணிக்கு சந்தனம் களையப்பட்டது.

மற்ற 364 நாட்களும் ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனை நடக்கும். நேற்று காலை 10:30 மணி முதல் சந்தனம் களையப்பட்ட மூலவர் மரகத நடராஜர், சிவகாமி அம்மனுக்கு மஞ்சள், திரவியப்பொடி, பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 31 வகையான அபிஷேகங்கள் நடந்தன.பின்னர் சந்தனம் முதலான தைலங்கள் பூசப்பட்டன. கரும்பச்சை நிறத்தில் மூலவர் காணப்பட்டார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். இரவு 10:30 மணிக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடந்தது.

இன்று ஜன., 10 அதிகாலை 5:00 மணிக்கு கல் தேர் மண்டபத்தில் கூத்தர் பெருமான் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. சூரிய உதயத்தில் ஆருத்ரா தரிசனம் நடத்தப்பட்டு, மரகத நடராஜர் திருமேனியில் புதிய சந்தனம் பூசி, மலர்களால் அலங்கரிங்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை 10:00 மணிக்கு கூத்தர் பெருமான் வீதியுலாவும், மாலை 4:00 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகமும், இரவு 8:00 மணிக்கு மாணிக்கவாசகருக்கு சுவாமிக்கு காட்சி தரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் வந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

படம் எடுக்க அனுமதி மறுப்பு: ஆருத்ரா தரிசன விழாவின் போது மரகத நடராஜர் சிலையை பத்திரிகை போட்டோ கிராபர்கள் பல ஆண்டுகளாக படமெடுத்து வந்தனர். கருவறைக்குள் இருக்கும் மரகத நடராஜர் சிலையை படம் பிடிப்பது ஆகம விதிப்படி தவறு என நேற்று அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால் அனுமதி மறுத்து விட்டார்.

* பக்தர்களுக்கு தற்காலிக கழிப்பறை, குடிநீர் வசதி செய்யப்படவில்லை. கட்டண தரிசன பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 
temple news
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தவித்த யாத்ரீகர்கள் 40 ... மேலும்
 
temple news
 சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று நடைபெற்ற ஆனி திருமஞ்சன தரிசன விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar