Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாடலீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா ... சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்: தேசிய இளைஞர் தினம் சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் சுத்திகிரியை பூஜை நாளை தொடக்கம்
எழுத்தின் அளவு:
சபரிமலையில் சுத்திகிரியை பூஜை நாளை தொடக்கம்

பதிவு செய்த நாள்

12 ஜன
2020
03:01

சபரிமலை: சபரிமலையில் மகரவிளக்கு சுத்திகிரியை பூஜைகள் நாளை தொடங்குகிறது. பந்தளத்தில் இருந்து திருவாபரணமும் நாளை புறப்படுகிறது.

மகரஜோதி தரிசனத்துக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளன. திருவாபரணம் பந்தளத்தில் இருந்து நாளை புறப்படுகிறது. மகரஜோதி நாளில் ஐயப்பனுக்கு நடைபெறும் முக்கிய பூஜை மகர சங்கரம பூஜை. இது இந்த ஆண்டு 15-ம் தேதி அதிகாலை 2:09 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கு முன்னோடியாக சுத்திகிரியைகள் நாளை தொடங்குகிறது.நாளை மாலை தீபாராதனைக்கு பின் பிராசாத சுத்தி பூஜைகள் நடைபெறும். நாளை மறுநாள் அதிகாலை 4:00 மணிக்கு பிம்ப சுத்தி பூஜைகள் நடைபெறும். தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் இந்த பூஜைகளை நடத்துவர். மகரவிளக்கு நாளில் அதிக பக்தர்கள் வருவார்கள் என்பதால் சன்னிதானத்தில் சிறப்பு போலீஸ் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

பாண்டித்தாவளத்தில் 9 இடங்களில் இருந்து 75 ஆயிரம் பக்தர்கள் ஜோதி தரிசனம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஜோதி தெரியும் பிற இடங்களுக்கு பக்தர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மகரஜோதி தரிசனத்துக்கு பின்னர் திருவாபரணம் அணிந்த ஐயப்பனை தரிசிக்க கூட்டம் அதிகரிக்கும். இதனால் வடக்கு வாசல் வரிசையில் நெரிசல் ஏற்படுவதை தடுக்க மாளிகைப்புறம் நடைப்பந்தலில் இருந்து இரும்பு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.புல்மேட்டில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பம்பை ஹில்டாப்பில் மண் இடிந்து விழுவதற்கு வாய்ப்பு உள்ளதால் அங்கு பக்தர்கள் செல்லாமல் இருக்க தடுப்பு வேலி அமைக்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar