Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் 140வது ... திருமலையில் மீண்டும் சுப்ரபாத சேவை திருமலையில் மீண்டும் சுப்ரபாத சேவை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை பெரிய கோவிலில் புதிய கொடி மரம்
எழுத்தின் அளவு:
தஞ்சை பெரிய கோவிலில் புதிய கொடி மரம்

பதிவு செய்த நாள்

13 ஜன
2020
10:01

தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரியகோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதிய கொடி மரம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் பெரியகோவிலில் பிப்ரவரி 5ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிலையில் கோவில் வளாகத்தில் சோழர் காலத்தில் நிறுவப்பட்ட கொடிமரம் படையெடுப்புகளால் அழிந்தது.அதன் பின் நாயக்க மன்னர்கள் காலத்தில் நந்தி மண்டபத்துக்கு முன் புதிய கொடி மரம் நிறுவப்பட்டிருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜி மன்னரால் 1801ம் ஆண்டில் இந்த கொடி மரத்துக்கு புதிய கருங்கல் பீடத்தை கட்டினார். இத்தகவல் பெரியகோவிலில் அவர் எழுப்பிய விநாயகர் கோவிலின் வடக்குச் சுவரிலுள்ள மராட்டிய மொழிக் கல்வெட்டில் காணப்படுகிறது.கடந்த 1814ம் ஆண்டில் பழுதடைந்த கொடி மரத்துக்குப் பதிலாகப் புதிய கொடி மரத்தை மன்னர் இரண்டாம் சரபோஜி செய்து கொடுத்தார்.

இக்கொடி மரமும் பழுதடைந்து விட்டதால் 2003 பிப்ரவரி 7ல் புதிய கொடி மரம் அமைக்கப்பட்டு அதற்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இக்கொடி மரத்தின் உயரம் 28 அடி. இதன் கீழ் இருக்கும் பீடம் 5 அடி உயரம். மொத்தம் 33 அடி உயரத்தில் இக்கொடி மரம் உள்ளது.தற்போது புனரமைப்பு செய்து மெருகூட்டுவதற்காக கொடி மரத்தின் மீது இருந்த பித்தளை கவசங்கள் ஜனவரி 2ல் கழற்றப்பட்டது. அப்போது கொடி மரம் சேதமடைந்திருப்பது தெரிய வந்தது. இதனால் புதிய கொடி மரம் அமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.மயிலாடுதுறை சென்னை ஸ்ரீரங்கம் ஆகிய பகுதிகளில் புதிய கொடி மரம் வாங்குவதற்காக முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை அருளும் சரஸ்வதி தேவி அவதார நாளாக வசந்த பஞ்சமி ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பூபதி திருநாள் எனப்படும் தை தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
ஜகார்த்தா: பொதுவாக உலகின் மிகப் பழமையான கலைப்படைப்புகள் என்றால், ஐரோப்பாவில் உள்ள பிரான்ஸ், ஸ்பெயின் ... மேலும்
 
temple news
முதுகுளத்தூர்; முதுகுளத்தூர் மு.தூரி, கிடாத்திருக்கை,இளஞ்செம்பூர், ஏனாதி வெண்ணீர்வாய்க்கால், ... மேலும்
 
temple news
சென்னை: தை மாதத்த பிரம்மோற்சவ விழாவிற்கு உத்தரவு வாங்குவதற்காக சென்னை கந்தகோட்ட ம் முத்துக்குமார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar