அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பத்ர காளியம்மன் கோயிலில் தைப் பொங்கலை முன்னிட்டு பத்ர காளியம்மன் கரும்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அம்மனுக்கு சிறப்பு அபிஷே ஆராதனைகள் நடந்தது. நகரில் உள்ள ஆயிரங்கண் மாரியம்மன் கோயில், மீனாட்சி சொக்கநாதர் கோயில், முத்துமாரியம்மன் கோயில், பட்டாபி ராமர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.